பதிவு செய்த நாள்
01 நவ2012
01:20
நடப்பாண்டில், காபி பூ பூப்பதற்கு முன்பான மழைப் பொழிவு 40 சதவீதம் குறைந்துள்ளது. இதனால், சென்ற ஆண்டைப் போலவே, நடப்பாண்டிலும், காபி உற்பத்தி, 3.14 லட்சம் டன்னிற்கும் குறைவாகவே இருக்கும் என, காபி உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், காபி வாரியம், நடப்பாண்டில் இதன் உற்பத்தி 3.25 லட்சம் டன்னாக இருக்கும் என, மதிப்பீடு செய்துள்ளது. இதில், அராபிகா வகை காபி உற்பத்தி 1.04 லட்சம் டன்னாகவும், ரோபஸ்டா வகை காபி உற்பத்தி 2.21 லட்சம் டன்னாகவும் உள்ளது. அதேசமயம், அராபிகா காபி உற்பத்தி 85 - 90 ஆயிரம் டன்னாகவும், ரோபஸ்டா காபி உற்பத்தி 2.10 லட்சம் டன் என்ற குறைந்த அளவில் தான் இருக்கும் என, கர்நாடக காபி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நடப்பாண்டில், ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான காலத்தில், நம்நாடு 2.81 லட்சம் டன் காபியை ஏற்றுமதி செய்துள்ளது. இந்த ஏற்றுமதி, இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலத்தில், 3.04 லட்சம் டன்னாக அதிகரித்து காணப்பட்டது. ஆக, நடப்பாண்டில் இதன் ஏற்றுமதி, 7.67 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.
இதே காலத்தில், மதிப்பின் அடிப்படையில், இதன் ஏற்றுமதி, 4,239 கோடி ரூபாயிலிருந்து, 4,231 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. எனினும், சென்ற 2011ம் ஆண்டில், ஒரு டன் காபி 1,39,456 ரூபாயாக இருந்த நிலையில், நடப்பாண்டில் இதன் விலை, 1,50,764 ரூபாயாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|