கொப்பரை பற்றாக்குறையால் தேங்காய் எண்ணெய் விலை உயர்வுகொப்பரை பற்றாக்குறையால் தேங்காய் எண்ணெய் விலை உயர்வு ... கச்சா பாமாயில் விலை குறைய வாய்ப்பு:இந்தோனேஷியா ஏற்றுமதி வரியை குறைத்தது கச்சா பாமாயில் விலை குறைய வாய்ப்பு:இந்தோனேஷியா ஏற்றுமதி வரியை குறைத்தது ...
காபி உற்பத்தி குறையும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 நவ
2012
01:20

நடப்பாண்டில், காபி பூ பூப்பதற்கு முன்பான மழைப் பொழிவு 40 சதவீதம் குறைந்துள்ளது. இதனால், சென்ற ஆண்டைப் போலவே, நடப்பாண்டிலும், காபி உற்பத்தி, 3.14 லட்சம் டன்னிற்கும் குறைவாகவே இருக்கும் என, காபி உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், காபி வாரியம், நடப்பாண்டில் இதன் உற்பத்தி 3.25 லட்சம் டன்னாக இருக்கும் என, மதிப்பீடு செய்துள்ளது. இதில், அராபிகா வகை காபி உற்பத்தி 1.04 லட்சம் டன்னாகவும், ரோபஸ்டா வகை காபி உற்பத்தி 2.21 லட்சம் டன்னாகவும் உள்ளது. அதேசமயம், அராபிகா காபி உற்பத்தி 85 - 90 ஆயிரம் டன்னாகவும், ரோபஸ்டா காபி உற்பத்தி 2.10 லட்சம் டன் என்ற குறைந்த அளவில் தான் இருக்கும் என, கர்நாடக காபி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நடப்பாண்டில், ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான காலத்தில், நம்நாடு 2.81 லட்சம் டன் காபியை ஏற்றுமதி செய்துள்ளது. இந்த ஏற்றுமதி, இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலத்தில், 3.04 லட்சம் டன்னாக அதிகரித்து காணப்பட்டது. ஆக, நடப்பாண்டில் இதன் ஏற்றுமதி, 7.67 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.
இதே காலத்தில், மதிப்பின் அடிப்படையில், இதன் ஏற்றுமதி, 4,239 கோடி ரூபாயிலிருந்து, 4,231 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. எனினும், சென்ற 2011ம் ஆண்டில், ஒரு டன் காபி 1,39,456 ரூபாயாக இருந்த நிலையில், நடப்பாண்டில் இதன் விலை, 1,50,764 ரூபாயாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)