பதிவு செய்த நாள்
01 நவ2012
14:18
சென்னை: தமிழகத்தில் பல்வேறு புதிய திட்டங்கள், விரிவாக்கப் பணிகள் மேற்கொள்வதற்காக பல்வேறு நிறுவனங்களுடன் நவம்பர் 5ல் தமிழக அரசு சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த திட்டங்களின் மதிப்பு ரூ.20,000 கோடி ஆகும். கடந்த 2 அமைச்சரவை கூட்டங்களில் இதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் இன்று தெரிவித்துள்ளார். ஹூண்டாய் உள்ளிட்ட ஆட்டோ நிறுவனங்கள், நோக்கியா உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள், பிஜிஆர் எனர்ஜி அன் ஹிட்சாச்சி உள்ளிட்ட மின்துறை நிறுவனங்கள் ஆகியவற்றுடன் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. ரூ.20,900 கோடி மதிப்பில் 12 முதலீட்டு திட்டங்கள் கையெழுத்தாக உள்ளது. இந்த திட்டங்களால் சுமார் 1.37 லட்சம் பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை பெறுவர் எனவும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|