பதிவு செய்த நாள்
02 நவ2012
03:24
ஐதராபாத்: நடப்பு 2012-13ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான, ஆறு மாத காலத்தில், பொது காப்பீட்டு நிறுவனங்களின், பிரிமியம் வருவாய், 18.9 சதவீதம் வளர்ச்சி கண்டு, 34,002 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின், இதே காலத்தில், 28,607 கோடி ரூபாயாக இருந்தது என, காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐ.ஆர்.டீ.ஏ.,) தெரிவித்துள்ளது.இதில், பொதுத் துறையை சேர்ந்த, நான்கு பொது காப்பீட்டு நிறுவனங்களின் பிரிமியம் வருவாய், இதே காலத்தில், 14,125 கோடி ரூபாயிலிருந்து, 19,876 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இந்நிலையில், கணக்கீட்டு காலத்தில், ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின், பிரிமியம் வருவாய், 4.2 சதவீதம் சரிவடைந்து, 46,963 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. அதேசமயம், கடந்த ஆண்டின், முதல் ஆறு மாத காலத்தில், இத்துறை நிறுவனங்களின் பிரிமியம் வருவாய், 49,046 கோடி ரூபாயாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.ஆயுள் காப்பீட்டுத் துறையில் முதலிடத்தில் உள்ள பொதுத் துறையை சேர்ந்த எல்.ஐ.சி., நிறுவனத்தின் பிரிமியம் வருவாய், 3.75 சதவீதம் குறைந்து, 36,721 கோடி ரூபாயிலிருந்து, 35,342 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|