"ஆப்பிள் ஐபோன் 5'யுனிவர்செல் அறிமுகம்"ஆப்பிள் ஐபோன் 5'யுனிவர்செல் அறிமுகம் ... ஏர் ஏசியா: கோலாலம்பூருக்கு கூடுதல் விமான சேவை ஏர் ஏசியா: கோலாலம்பூருக்கு கூடுதல் விமான சேவை ...
ஆவண வெளியீடுகள் வாயிலாக நிறுவனங்கள் ரூ.8,000 கோடி திரட்டின
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 நவ
2012
03:21

மும்பை: சென்ற செப்டம்பர் மாதத்தில், 14 இந்திய நிறுவனங்கள், மூலதனச் சந்தை வாயிலாக, 7,990 கோடி ரூபாயை திரட்டி கொண்டுள்ளன.இதற்கு முந்தைய ஆகஸ்ட் மாதத்தில், இரண்டு நிறுவனங்கள் மட்டுமே, மூலதனச் சந்தையில் இருந்து, 12.40 கோடி ரூபாயை திரட்டி கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.
செப்டம்பர் மாதத்தில், நிறுவனங்கள், மூலதனச் சந்தையில், புதிய பங்கு வெளியீடுகள், உரிமை பங்கு வெளியீடுகள் மற்றும் கடன் பத்திரங்கள் வாயிலாக, அதிக அளவிலான நிதியை திரட்டி கொண்டுள்ளன என, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, "செபி' தெரிவித்துள்ளது.நடப்பு 2012-13ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான, முதல் ஆறு மாத காலத்தில், மூலதனச் சந்தையில், 27 வகையான வெளியீடுகள் வாயிலாக, 9,130 கோடி ரூபாயை நிறுவனங்கள் திரட்டி கொண்டுள்ளன. சென்ற நிதியாண்டின், இதே காலத்தில், 47 வெளியீடுகள் மூலம், 16,131 கோடி ரூபாய் திரட்டிக் கொள்ளப்பட்டது.சென்ற செப்டம்பரில், நான்கு நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீடு வாயிலாக, 36 கோடி ரூபாய் மட்டுமே திரட்டியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனங்களின் பங்குகள், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான (எஸ்.எம்.இ.,) சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன. அதேசமயம், ஏழு நிறுவனங்கள், உரிமை பங்கு வெளியீடு வாயிலாக, 6,682 கோடி ரூபாயை திரட்டியுள்ளன. மூன்று நிறுவனங்கள், கடன் பத்திரங்களை வெளியிட்டு, 1,272 கோடி ரூபாயை திரட்டிக் கொண்டுள்ளன.


Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)