பதிவு செய்த நாள்
05 நவ2012
03:21
மும்பை: சென்ற செப்டம்பர் மாதத்தில், 14 இந்திய நிறுவனங்கள், மூலதனச் சந்தை வாயிலாக, 7,990 கோடி ரூபாயை திரட்டி கொண்டுள்ளன.இதற்கு முந்தைய ஆகஸ்ட் மாதத்தில், இரண்டு நிறுவனங்கள் மட்டுமே, மூலதனச் சந்தையில் இருந்து, 12.40 கோடி ரூபாயை திரட்டி கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.
செப்டம்பர் மாதத்தில், நிறுவனங்கள், மூலதனச் சந்தையில், புதிய பங்கு வெளியீடுகள், உரிமை பங்கு வெளியீடுகள் மற்றும் கடன் பத்திரங்கள் வாயிலாக, அதிக அளவிலான நிதியை திரட்டி கொண்டுள்ளன என, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, "செபி' தெரிவித்துள்ளது.நடப்பு 2012-13ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான, முதல் ஆறு மாத காலத்தில், மூலதனச் சந்தையில், 27 வகையான வெளியீடுகள் வாயிலாக, 9,130 கோடி ரூபாயை நிறுவனங்கள் திரட்டி கொண்டுள்ளன. சென்ற நிதியாண்டின், இதே காலத்தில், 47 வெளியீடுகள் மூலம், 16,131 கோடி ரூபாய் திரட்டிக் கொள்ளப்பட்டது.சென்ற செப்டம்பரில், நான்கு நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீடு வாயிலாக, 36 கோடி ரூபாய் மட்டுமே திரட்டியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனங்களின் பங்குகள், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான (எஸ்.எம்.இ.,) சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன. அதேசமயம், ஏழு நிறுவனங்கள், உரிமை பங்கு வெளியீடு வாயிலாக, 6,682 கோடி ரூபாயை திரட்டியுள்ளன. மூன்று நிறுவனங்கள், கடன் பத்திரங்களை வெளியிட்டு, 1,272 கோடி ரூபாயை திரட்டிக் கொண்டுள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|