பதிவு செய்த நாள்
10 நவ2012
06:18
புதுடில்லி:
நடப்பு 2012-13ம் நிதியாண்டில், நாட்டின், வேளாண் பொருட்கள் ஏற்றுமதி, 1
லட்சம் கோடி ரூபாயைத் தாண்டும் என, வேளாண் பொருட்கள் மற்றும்
பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (அபெடா)
தெரிவித்துள்ளது.கொத்தவரை, அரிசி மற்றும் கோதுமை ஏற்றுமதி சிறப்பான அளவில்
உயர்ந்து வருகிறது. நடப்பு நிதியாண்டின், செப்டம்பர் வரையிலான ஆறு மாத
காலத்தில், நாட்டின், வேளாண் பொருட்கள் ஏற்றுமதி, 63 ஆயிரம் கோடி ரூபாயாக
அதிகரித்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின், இதே காலத்தில், மேற்கொள்ளப்பட்ட
ஏற்றுமதியை (28,500 கோடி ரூபாய்) விட, 121 சதவீதம் அதிகமாகும்.
கணக்கீட்டு காலத்தில், கொத்தவரை ஏற்றுமதி, 488 சதவீதமும், சாதாரண அரிசி ஏற்றுமதி, 993 சதவீதமும் அதிகரித்துள்ளது. இதில், கொத்தவரை ஏற்றுமதி மதிப்பு, 21,536 கோடி ரூபாயாகும். நாட்டின், ஒட்டுமொத்த வேளாண் பொருட்கள் ஏற்றுமதியில், இதன் பங்களிப்பு, 45
சதவீத அளவிற்கு உள்ளது. சர்வதேச சந்தையில், தொழில் துறையில், கொத்தவரைக்கான
தேவை அதிகரித்துஉள்ளதே இதற்கு காரணம்.நடப்பு நிதியாண்டின், முதல் ஆறு மாத
காலத்தில், சாதாரண அரிசி ஏற்றுமதி, கடந்த ஆண்டின், இதே காலத்தை விட, 993
சதவீதம் அதிகரித்து, 6,285 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. சாதாரண அரிசி
ஏற்றுமதிக்கு, தடை விதிக்கப்பட்டிருந்தது. இத்தடை, கடந்த ஆண்டு, செப்டம்பர்
மாதம் முதல் விலக்கி கொள்ளப்பட்டது. இதை அடுத்து, இதன் ஏற்றுமதி அளவு
மற்றும் மதிப்பின் அடிப்படையில் மிகவும் உயர்ந்துள்ளது.
பாசுமதி அரிசிஅதேசமயம், கணக்கீட்டு காலத்தில், பாசுமதி அரிசி ஏற்றுமதி, 4.5
சதவீதம் மட்டும் வளர்ச்சிகண்டு, 9,054 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
நாட்டின், மொத்த பாசுமதி ஏற்றுமதியில், வளைகுடா நாடுகள், அமெரிக்கா, ஈரான்,
சவுதி அரேபியா மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளின் பங்களிப்பு,
மிகவும் அதிகமாக உள்ளது. ஒட்டுமொத்த அரிசி ஏற்றுமதி, கணக்கீட்டு காலத்தில்,
15,339 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
மேற்கண்ட வேளாண் பொருட்கள் தவிர, கோதுமை ஏற்றுமதியும், 3,619 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
அதேசமயம், கடந்த ஆண்டின், இதே காலத்தில், இதன் ஏற்றுமதி, 33 கோடி ரூபாய்
என்ற அளவிற்கே இருந்தது.மேலும், பதப்படுத்தப்பட்ட இறைச்சி ஏற்றுமதி, 7,595
கோடி ரூபாய் என்ற அளவில் இருந்தது.
இதுதவிர, பால் பொருட்கள் (523 கோடி ரூபாய்), நிலக்கடலை ( 2,475 கோடி
ரூபாய்), பழங்கள் மற்றும் காய்கறிகள் (2,700 கோடி ரூபாய்)) ஆகியவற்றின்
ஏற்றுமதியும், சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது.
இருப்பினும், சர்வதேச சந்தையில், பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள்
ஏற்றுமதியில், இந்தியாவின் பங்களிப்பு, 2 சதவீதம் என்ற அளவிற்கே உள்ளது.
நாட்டின், மொத்த வேளாண் பொருட்கள் ஏற்றுமதியில், சவுதி அரேபியா, ஐக்கிய
அரபு நாடுகள், இங்கிலாந்து, வங்கதேசம், தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட, 15
நாடுகளின் பங்களிப்பு, 65 சதவீத அளவிற்கும் அதிகமாக உள்ளது என, "அபெடா'
அமைப்பின் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|