வெல்லம் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சிவெல்லம் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி ... தபால் நிலைய தங்க நாணயத்திற்கு 7 சதவீத தள்ளுபடி அறிவிப்பு தபால் நிலைய தங்க நாணயத்திற்கு 7 சதவீத தள்ளுபடி அறிவிப்பு ...
வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ரூ.1 லட்சம் கோடியை தாண்டும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 நவ
2012
06:18

புதுடில்லி: நடப்பு 2012-13ம் நிதியாண்டில், நாட்டின், வேளாண் பொருட்கள் ஏற்றுமதி, 1 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டும் என, வேளாண் பொருட்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (அபெடா) தெரிவித்துள்ளது.கொத்தவரை, அரிசி மற்றும் கோதுமை ஏற்றுமதி சிறப்பான அளவில் உயர்ந்து வருகிறது. நடப்பு நிதியாண்டின், செப்டம்பர் வரையிலான ஆறு மாத காலத்தில், நாட்டின், வேளாண் பொருட்கள் ஏற்றுமதி, 63 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின், இதே காலத்தில், மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை (28,500 கோடி ரூபாய்) விட, 121 சதவீதம் அதிகமாகும்.
கணக்கீட்டு காலத்தில், கொத்தவரை ஏற்றுமதி, 488 சதவீதமும், சாதாரண அரிசி ஏற்றுமதி, 993 சதவீதமும் அதிகரித்துள்ளது. இதில், கொத்தவரை ஏற்றுமதி மதிப்பு, 21,536 கோடி ரூபாயாகும். நாட்டின், ஒட்டுமொத்த வேளாண் பொருட்கள் ஏற்றுமதியில், இதன் பங்களிப்பு, 45 சதவீத அளவிற்கு உள்ளது. சர்வதேச சந்தையில், தொழில் துறையில், கொத்தவரைக்கான தேவை அதிகரித்துஉள்ளதே இதற்கு காரணம்.நடப்பு நிதியாண்டின், முதல் ஆறு மாத காலத்தில், சாதாரண அரிசி ஏற்றுமதி, கடந்த ஆண்டின், இதே காலத்தை விட, 993 சதவீதம் அதிகரித்து, 6,285 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. சாதாரண அரிசி ஏற்றுமதிக்கு, தடை விதிக்கப்பட்டிருந்தது. இத்தடை, கடந்த ஆண்டு, செப்டம்பர் மாதம் முதல் விலக்கி கொள்ளப்பட்டது. இதை அடுத்து, இதன் ஏற்றுமதி அளவு மற்றும் மதிப்பின் அடிப்படையில் மிகவும் உயர்ந்துள்ளது.

பாசுமதி அரிசிஅதேசமயம், கணக்கீட்டு காலத்தில், பாசுமதி அரிசி ஏற்றுமதி, 4.5 சதவீதம் மட்டும் வளர்ச்சிகண்டு, 9,054 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. நாட்டின், மொத்த பாசுமதி ஏற்றுமதியில், வளைகுடா நாடுகள், அமெரிக்கா, ஈரான், சவுதி அரேபியா மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளின் பங்களிப்பு, மிகவும் அதிகமாக உள்ளது. ஒட்டுமொத்த அரிசி ஏற்றுமதி, கணக்கீட்டு காலத்தில், 15,339 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

மேற்கண்ட வேளாண் பொருட்கள் தவிர, கோதுமை ஏற்றுமதியும், 3,619 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

அதேசமயம், கடந்த ஆண்டின், இதே காலத்தில், இதன் ஏற்றுமதி, 33 கோடி ரூபாய் என்ற அளவிற்கே இருந்தது.மேலும், பதப்படுத்தப்பட்ட இறைச்சி ஏற்றுமதி, 7,595 கோடி ரூபாய் என்ற அளவில் இருந்தது.

இதுதவிர, பால் பொருட்கள் (523 கோடி ரூபாய்), நிலக்கடலை ( 2,475 கோடி ரூபாய்), பழங்கள் மற்றும் காய்கறிகள் (2,700 கோடி ரூபாய்)) ஆகியவற்றின் ஏற்றுமதியும், சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது.

இருப்பினும், சர்வதேச சந்தையில், பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதியில், இந்தியாவின் பங்களிப்பு, 2 சதவீதம் என்ற அளவிற்கே உள்ளது. நாட்டின், மொத்த வேளாண் பொருட்கள் ஏற்றுமதியில், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள், இங்கிலாந்து, வங்கதேசம், தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட, 15 நாடுகளின் பங்களிப்பு, 65 சதவீத அளவிற்கும் அதிகமாக உள்ளது என, "அபெடா' அமைப்பின் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)