தங்கம் விலை சற்று உயர்வுதங்கம் விலை சற்று உயர்வு ... நாட்டின் அன்னிய செலாவணி ; கையிருப்பு ரூ.5,225 கோடி சரிவு நாட்டின் அன்னிய செலாவணி ; கையிருப்பு ரூ.5,225 கோடி சரிவு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
பரஸ்பர நிதி நிறுவனங்கள் சொத்து மதிப்பு ரூ.7.68 லட்சம் கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 நவ
2012
02:34

மும்பை: சென்ற அக்டோபர் மாதத்தில், இந்திய பரஸ்பர நிதி நிறுவனங்களால் நிர்வகிக்கும், சொத்து மதிப்பு, 7.68 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய செப்டம்பர் மாதத்தில் நிர்வகிக்கப்பட்ட சொத்து மதிப்பை (7.20 லட்சம் கோடி ரூபாய்) விட, 6.68 சதவீதம் அதிகமாகும்.கடந்த 18 மாதங்களில் இல்லாத அளவிற்கு, பரஸ்பர நிதி நிறுவனங்களால் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, சென்ற அக்டோபரில் அதிகரித்துள்ளது.உள்நாட்டில், பங்கு வர்த்தகம் நன்கு இல்லாததால், பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் மேற்கொள்ளப்படும் முதலீடு குறைந்து வருகிறது. இதனால், சென்ற அக்டோபர் மாதத்தில், பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில், பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, 2 சதவீதம் குறைந்து, 1.59 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவில் குறைந்துள்ளது.அதேசமயம், கடன் சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்கள் வாயிலாக நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு, சிறப்பான அளவில் அதிகரித்து வருகிறது. சென்ற அக்டோபர் மாதத்தில் மட்டும், கடன் சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில், நிர்வகிக்கப்பட்ட சொத்து மதிப்பு, 22.4 சதவீதம்

அதிகரித்துள்ளது.சென்ற அக்டோபர் மாதம் பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பில்,"கில்ட் பண்டு' திட்டத்தின் கீழ், வருவாய் மற்றும் நிதி சந்தை சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு, முந்தைய செப்டம்பர் மாதத்தை விட, 31 சதவீதம் வளர்ச்சிகண்டு, 1,037 கோடி ரூபாய் அதிகரித்து உள்ளது. இதையடுத்து, இதுவரையிலுமாக, "கில்ட் பண்டு' திட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு, 2 சதவீதம் உயர்ந்து, 48,135 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.அதேசமயம், சென்ற அக்டோபர் மாதத்தில்,"ஈ.டி.எப்.,' திட்டங்களின் சொத்து மதிப்பு, 5 சதவீதம் குறைந்து, 1,715 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. "கோல்டு ஈ.டி.எப்.,' சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு, செப்டம்பர் மாதத்தை விட, 2.5 சதவீதம் வளர்ச்சிகண்டு, 11,477 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)