பதிவு செய்த நாள்
12 நவ2012
14:01
மும்பை: "பொதுத்துறை வங்கிகளின் வராக்கடன், 1.12 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது' என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை விபரம்:பொதுத்துறை வங்கிகளின் வராக்கடன், 2003ல், 53 ஆயிரம் கோடியாக இருந்தது. அந்த வராக்கடன் நடப்பு ஆண்டில், 1.12 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. நாட்டின் முன்னணி வங்கியான, எஸ்.பி.ஐ., மற்றும் துணை வங்கிகளின் வராக்கடன், 2003ல், 17 ஆயிரம் கோடியாக இருந்தது. இந்த ஆண்டு, மார்ச், 31ல், 46 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது.இதுதவிர, மற்ற பொதுத்துறை வங்கிகளின் வராக்கடன், 2003ல், 36 ஆயிரம் கோடியாக இருந்தது. இப்போது, 66 ஆயிரம் கோடியாகியுள்ளது. இந்த வராக்கடன்களில், முன்னுரிமை துறைகள் செலுத்த வேண்டிய தொகை, 24 ஆயிரம் கோடி. இதர துறைகள் செலுத்த வேண்டிய கடன் பாக்கி, 22 ஆயிரம் கோடி.
இவ்வாறு, ரிசர்வ் வங்கி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|