சர்வதேச மந்த நிலையால் காபி ஏற்றுமதியில் சரிவு நிலைசர்வதேச மந்த நிலையால் காபி ஏற்றுமதியில் சரிவு நிலை ... தங்க, வைர நகை ஏற்றுமதி 400 கோடி டாலர் தங்க, வைர நகை ஏற்றுமதி 400 கோடி டாலர் ...
நாட்டின் கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி ரூ.2,700 கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 நவ
2012
00:45

- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து - நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், நாட்டின், கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி மதிப்பின் அடிப்படையில், 2,700 கோடி ரூபாயாக குறைந்து உள்ளது.இது, முந்தைய நிதியாண்டின், இதே காலாண்டில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை (2,870 கோடி ரூபாய்) விட, 5 சதவீதம் குறைவாகும் என, கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.இந்திய கடல் உணவு பொருட்களுக்கு, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் முக்கிய சந்தைகளாகத் திகழ்கின்றன. இந்தியாவின், மொத்த கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதியில், மேற்கண்ட நாடுகளின் பங்களிப்பு மட்டும், 55 சதவீதம் என்ற அளவில் உள்ளது.

சர்வதேச பொருளாதார நெருக்கடியால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், இந்நாடுகளுக்கு, இந்தியாவில் இருந்து மேற்கொள்ளப்படும் ஒட்டுமொத்த ஏற்றுமதி குறைந்து வருகிறது.இதில், கடல் உணவு பொருட்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. இந்நாடுகள், பெரும்பாலும், இந்தியாவில் இருந்து, விலை குறைவான மீன், இறால் உள்ளிட்ட கடல் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய அதிகம் விரும்புகின்றன.மதிப்பீட்டு காலத்தில், அளவின் அடிப்படையிலான, கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி, 20 சதவீதம் வீழ்ச்சிகண்டு, 1.65 லட்சம் டன்னிலிருந்து, 1.31 லட்சம் டன்னாக சரிவடைந்து உள்ளது.இந்திய இறால்களில், வேதி பொருட்கள் கலந்திருப்பதால், ஜப்பான் அதன் இறக்குமதியை நிறுத்தியுள்ளது. இதனால், கடந்த நான்கு, ஐந்து மாதங்களில், ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களிலிருந்து ஏற்றுமதியாகும் இறால் அளவு, 50 சதவீதம் குறைந்து உள்ளது.இதுகுறித்து, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால், இனி வரும் காலத்தில், இறால் ஏற்றுமதி அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கு வங்கத்திலிருந்து, கருப்பு வகை இறால்களே அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்

படுகின்றன.இந்நிலையில், சர்வதேச சந்தையில், கடந்த மூன்று, நான்கு மாதங்களாக, இறால்களின் விலை, 25 - 35 சதவீதம் சரிவடைந்துள்ளது. இதுவும், இந்தியாவின் ஒட்டு மொத்த கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிய வந்துள்ளது.சென்ற, 2011-12ம் நிதியாண்டில், இந்தியாவிலிருந்து, 2,140 கோடி ரூபாய் மதிப்புள்ள, 85,800 டன் கடல் உணவு பொருட்களை ஜப்பான் இறக்குமதி செய்து கொண்டது என, இந்த கூட்டமைப்பு மேலும் தெரிவித்து உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)