பதிவு செய்த நாள்
19 நவ2012
14:59
புதுடில்லி: செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த மூன்றாவது காலாண்டில், சர்வதேச அளவில் செல்போன்கள் விற்பனை 3 சதவீதம் குறைந்து 42.80 கோடியாக குறைந்துள்ளது. செல்போன் விற்பனை குறைந்திருந்தாலும், ஸ்மார்ட்போன்களின் விற்பனை அதிகரித்துள்ளது. இந்த ரக போன்களின் விலை குறைந்து வருவது, இணையதளத்தை பயன்படுத்தும் வசதி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சாதாரண செல்போன்களை விடுத்து ஸ்மார்ட் போன்கள் மீது ஆர்வம் அதிகரித்து வருகிறது. மொத்த செல்போன் விற்பனையில் ஸ்மார்ட் போன்களின் பங்கு 39.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதாவது, மூன்றாவது காலாண்டில் சர்வதேச அளவில் 16.92 கோடி ஸ்மார்ட் போன்கள் விற்பனையாகியுள்ளன.சீனாவில் ஸ்மார்ட் போன்கள் விற்பனை அதிகரித்ததால், உலக அளவில் செல்போன் விற்பனை அதிகரித்துள்ளதாக கார்ட்னர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக பழைய, அடிப்படை மாடல்களை மாற்றுகின்ற வாடிக்கையாளர்களின் முதல் தேர்வாக இப்போது ஸ்மார்ட் போன் இருப்பது தெரியவந்துள்ளது.ஸ்மார்ட் போன் விற்பனையில் ஆப்பிள் மற்றும் சாம்சங் ஆகிய நிறுவனங்கள் இணைந்து 46.5 சதவீத சந்தைப் பங்கினை கொண்டுள்ளதாக கார்ட்னர் நிறுவனத்தை சேர்ந்த அன்ஷுல் குப்தா தெரிவித்துள்ளார். ஸ்மார்ட் போன் விற்பனையில் இதுவரை மூன்றாவது இடத்திலிருந்த நோக்கியா ஏழாவது இடத்திற்கு இறங்கியுள்ளது. மூன்றாவது இடத்தை பிளாக்பெர்ரி பிடித்துள்ளது. நான்காவது இடத்தில் எச்.டி.சி. உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|