"2ஜி' ஏலம் நிர்ணய தொகை மிக அதிகம்: மான்டேக் சிங்"2ஜி' ஏலம் நிர்ணய தொகை மிக அதிகம்: மான்டேக் சிங் ... ரூ.24000த்தை தொட்டது தங்கம் விலை ரூ.24000த்தை தொட்டது தங்கம் விலை ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
சிறிய கார்கள் தயாரிப்பில் நிறுவனங்கள் தீவிரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 நவ
2012
00:02

புதுடில்லி:இந்தியாவில் உள்ள கார் தயாரிப்பு நிறுவனங்கள், அடுத்த ஒன்றரை ஆண்டுகளில், இந்திய சாலைகளில், 10 சிறிய கார்களை களமிறக்க திட்டமிட்டுள்ளன. பெட்ரோல் விலை உயர்வால், டீசல் கார்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது.இந்திய கார் சந்தையின் ஆண்டு விற்பனை, 20 லட்சம் என்ற எண்ணிக்கையில் உள்ளது. இதில், டீசல் கார்களின் பங்களிப்பு, 50 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இதை கருத்தில் கொண்டு,பல நிறுவனங்கள், டீசலில் இயங்கும் சிறிய கார்களை அறிமுகப்படுத்த உள்ளன. ஹூண்டாய் மோட்டார்ஸ்கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம், 1.1 லிட்டர் இன்ஜின் திறன் கொண்ட, டீசலில் இயங்கும் "ஐ 10' என்ற சிறிய காரை அறிமுகப்படுத்த உள்ளது.இதற்காக, இந்நிறுவனம், சென் னையில் உள்ள அதன் தொழிற்சாலையை, 30 கோடி டாலர் முதலீட்டில் விரிவாக்கம் செய்கிறது. இங்கு, டீசல் இன்ஜின்களும் தயாரிக்கப்பட உள்ளன.இந்நிறுவனம் ஏற்கனவே, மேம்படுத்தப்பட்ட "ஐ 10' மற்றும் "ஐ 20' மாடல் கார்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
டாட்டா மோட்டார்ஸ்:டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம், டீசலில் இயங்கும், 800 சி.சி., இன்ஜின் திறன் கொண்ட "நானோ' காரை உருவாக்கி வருகிறது. வரும் ஆண்டு தொடக்கத்தில் இந்த கார் சந்தையை கலக்க வரும் என, தெரிகிறது.மேலும், "நானோ' மற்றும் "இண்டிகா' வகை கார்களுக்கு இடைபட்ட, புதிய கார் ஒன்றை அறிமுகப் படுத்தவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் டாட்டா மோட்டார்ஸ், அதன் பலதரப்பட்ட கார்களின் விற்பனையை அதிகரித்து, இந்திய கார் சந்தையில், ஹூண்டாயை விஞ்சி, இரண்டாவது இடத்தை பிடிக்க முயற்சி மேற்கொண்டுள்ளது.அனைத்து நிறுவனங்களும், அவற்றின் புதிய சிறிய கார்களின் விலையை, 2.50 லட்சம் முதல், 6 லட்ச ரூபாய் வரை, நிர்ண யிக்க திட்டமிட்டுள்ளன.
மகிந்திரா:பன்முக பயன்பாட்டு வாகன தயாரிப்பில் தீவிரம் காட்டி வரும் மகிந்திரா குழுமம் கூட, டீசலில் இயங்கும் சிறிய கார் தயாரிப்பில் கவனத்தை திருப்பிஉள்ளது. இதன், டீசலில் இயங்கும், சிறிய வகை "வெரிட்டோ' கார் விற்பனை, வரும் 2013ம் ஆண்டு மத்தியில் துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, இந்நிறுவனம், மின்சாரத்தில் இயங்கும் "இ 20' என்ற சிறிய காரை தயாரித்துள்ளது. ஆனால், மின்சார கார்களுக்கு வழங்கும் மானியம் குறித்த அரசின் தெளிவான கொள்கை அறிவிப்பை எதிர் நோக்கி யுள்ளதால், இந்நிறுவனம் அதன் மின்சார கார் அறிமுகத்தை தள்ளி வைத்துள்ளது.மகிந்திரா குழுமத்துடன் முன்பு வர்த்தக கூட்டு வைத்திருந்த பிரான்சின் ரெனால்ட் நிறுவனம், ஐந்து லட்ச ரூபாய்க்கும் குறைவான விலையில், அதன் சிறிய காரை சந்தைப்படுத்ததிட்டமிட்டுள்ளது.
போர்டு இந்தியா: போர்டு இந்தியா நிறுவனம், அதன் "பிகோ' காருக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, "கே.ஏ.,' என்ற சிறிய காரை அறிமுகப்படுத்த உள்ளது. மேலும் இந்நிறுவனம், "பீ-மேக்ஸ்' என்ற புதிய காரையும் வெளி யிட திட்டமிட்டுள்ளது.
நிசான்: இந் நிறுவனம், அதன் "டேட்சன்' பிராண்டு சிறிய காரை, இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இத்துடன், மேலும் மூன்று வகை கார்களையும் சந்தைப்படுத்த உள்ளது. ஸ்கோடா நிறுவனம், வரும் 2013-14ம் நிதி யாண்டில், புதிய "பேபியா' காரை வெளியிட தீர்மானித்துள்ளது. இது, தற்போது விற்பனையாகி வரும் "பேபியா' காரின் விலையை விட, குறைவாக இருக்கும்.இந்நிறுவனம், அதன் தாய் நிறுவனமான வோக்ஸ்வேகன் தயாரிப்பு களை விட, விலை குறைவான கார்களை வெளியிட்டு, விற்பனை எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
இதனிடையே வோக்ஸ்வேகன் நிறுவனமும், அதன் "அப்' காரை, இந்தியாவிற்கு ஏற்றார் போல் மாற்றியமைத்து சந்தைப்படுத்த தீர்மானித்துள்ளது. இத்துடன், வளரும் நாடுகளுக்கென, விலை குறைந்த, புதிய காரை அறிமுகப் படுத்தவும் முடிவு செய்துள்ளது.
மாருதி சுசூகி:இந்திய கார் சந்தையில் மாருதி சுசூகி நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. இந்நிறுவனத்தின் "மாருதி 800' மற்றும் "ஆல்டோ' ஆகிய சிறிய கார்களுக்கு போட்டியாக, ஹோண்டாவின் "பிரியோ', டொயோட்டோவின் "எட்டியோஸ்', நிசானின் "மைக்ரா', வோக்ஸ்வேகனின் "போலோ' ஆகிய கார்கள் சந்தையில் களமிறக்கப் பட் டன.இவற்றின் தாக்கத்தால், மாருதியின் "ஸ்விப்ட்', ஹோண்டாவின் "ஜாஸ்',ஹூண்டாயின் "ஐ20' போன்ற நடுத் தர வகை கார்களின் விலை, குறைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)