பதிவு செய்த நாள்
27 நவ2012
04:09
புதுடில்லி: டீசலில் இயங்கும் சொகுசு கார்களுக்கு (எஸ்.யூ.வி.,), ஆண்டுக்கு, 50 ஆயிரம் ரூபாய் வரை, சாலை வரி விதிக்கலாம் என, மத்திய நிதி அமைச்சகத்திற்கு, மானியச் சுமை குறைப்பு மற்றும் மேம்பாட்டு நடவடிக்கை குழு பரிந்துரைத்துள்ளது.இது குறித்து, இக்குழுவின் தலைவரும், மத்திய திட்டக்குழு முன்னாள் உறுப்பினருமான கிரித் பரேக் செய்தியாளர்களிடம் கூறியதாவது:டீசலுக்கான மானிய உச்சவரம்பை லிட்டருக்கு, 9 ரூபாயாக நிர்ணயித்து, சந்தை விலை அடிப்படையில் விற்பனை விலையை தீர்மானிக்கலாம். புதிய டீசல் கார்களுக்கு, டீசல் வரி விதிக்கும் திட்டத்திற்கு பதிலாக, தற்போதுள்ள ஒரு முறை சாலை வரியை நீக்கிவிட்டு, பெட்ரோல் மற்றும் டீசல் கார்களுக்கு ஆண்டுதோறும், சாலை வரிகளை வசூலிக்கலாம்.
இதன்படி, பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் சாதாரண கார்களுக்கு இடையிலான வரி வித்தியாசம் அதிகபட்சம், 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரையும், டீசலில் இயங்கும் எஸ்.யூ.வி., கார்களுக்கு, 50 ஆயிரம் ரூபாய் வரையும் இருக்கலாம். இவ்வாறு கிரித் பரேக் கூறினார்.இது குறித்து, இந்திய வாகன தயாரிப்பாளர்கள் சங்கத்தின் துணை தலைவர் விக்ரம் கிர்லோஸ்கர் கூறும்போது,"தற்போது வாகனத்தின் மொத்த விலையில், 45 சதவீதம் வரியாக வசூலிக்கப்படுகிறது. மேலும், வரி விதித்தால், இத்துறையை வெகுவாக பாதிக்கும்' என்று தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|