பதிவு செய்த நாள்
27 நவ2012
04:10
ஆத்தூர்:
ஆத்தூர், புதுப்பேட்டை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை
சங்கத்தில் நடந்த மஞ்சள் ஏலத்தில், 600 மூட்டை மஞ்சள், 20 லட்சம்
ரூபாய்க்கு விற்பனையானது.ஆத்தூர், புதுப்பேட்டை வேளாண்மை உற்பத்தியாளர்கள்
கூட்டுறவு விற்பனை சங்கம் மற்றும் தனியார் கமிஷன் மண்டிகளில், மஞ்சள் ஏலம்
நடந்தது.ஏலத்துக்கு, கடலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, நையினார்பாளையம்,
கள்ளக்குறிச்சி, சின்னசேலம் ஆகிய வெளி மாவட்ட பகுதியைச் சேர்ந்த விவசாயிகள்
மட்டுமல்லாது, ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி ஆகிய பகுதியைச் சேர்ந்த
விவசாயிகள், தாங்கள் விளைவித்த மஞ்சளை, விற்பனைக்கு கொண்டு
வந்தனர்.ஏலத்தில், ஒரு குவிண்டால் விரலி மஞ்சள், குறைந்தபட்சம், 4,113
ரூபாய்க்கும், அதிகபட்சம், 6,499 ரூபாய்க்கும், உருண்டை மஞ்சள்
குறைந்தபட்சம், 3,012 ரூபாய்க்கும், அதிகபட்சம், 5,269 ரூபாய்க்கும்,
பனங்காலி மஞ்சள் குறைந்தபட்சம், 9,006 ரூபாய்க்கும், அதிகபட்சம், 12 ஆயிரம்
ரூபாய்க்கும் விற்பனையானது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|