பதிவு செய்த நாள்
27 நவ2012
04:17
மும்பை: நாட்டின் பங்கு வர்த்தகம், வாரத்தின் தொடக்க தினமான திங்கட்கிழமையன்று நன்கு இருந்தது.பல முன்னணி நிறுவனப் பங்குகளின் விலை குறைந்திருந்ததை சாதகமாக பயன்படுத்தி, முதலீட்டாளர்கள் அதிகளவில், பங்குகளை வாங்கியதை அடுத்து, பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்தது.
ஐரோப்பிய நாடுகளில் பங்கு வர்த்தகம் சுணக்கமாகவே இருந்தது. இருப்பினும், இதர ஆசிய நாடுகளில், பங்கு வியாபாரம் ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது.நேற்றைய பங்கு வியாபாரத்தில்,
தகவல் தொழில்நுட்பம், நுகர்வோர் சாதனங்கள் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு அதிக தேவை காணப்பட்டது. இருப்பினும், வங்கி, மோட்டார் வாகனம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 30.44 புள்ளிகள் அதிகரித்து, 18,537.01 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 18,590.33 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 18,508.79 புள்ளிகள் வரையிலும் சென்றது.'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், விப்ரோ, ஸ்டெர்லைட் பார்தி ஏர்டெல் உள்ளிட்ட 18 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், மகிந்திரா அண்டு மகிந்திரா, சன்பார்மா, கெயில் உள்ளிட்ட 12 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.
தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி', 9.30 புள்ளிகள் உயர்ந்து, 5,635.90 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிக பட்சமாக, 5,649.20 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,623.45 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|