தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 குறைவு   தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 குறைவு ... நாட்டின் பருத்தி உற்பத்தி3.34 கோடி பொதிகளாக இருக்கும் நாட்டின் பருத்தி உற்பத்தி3.34 கோடி பொதிகளாக இருக்கும் ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் 5
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 நவ
2012
14:41

ஆப்பிள் நிறுவனம் அண்மையில் வெளியிட்ட ஐ போன் 5, நவம்பர் முதல் வாரத்தில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப் படுத்தப்பட்டது. அமெரிக்காவில் வெளியாகி ஏறத்தாழ ஒரு மாதத்திற்குப் பின்னர் இது இங்கு கிடைக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் இன்னும் 100 நாடுகளில் இது விற்பனைக்குக் கிடைக்கும். மிகக் குறைந்த எடையில், மெலிதான அமைப்பில் 4 அங்குல அகலத் திரையுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த போன் முந்தைய ஐ போன் 4 ஐக் காட்டிலும் 20% குறைவான எடையில் தயாரிக்கப்பட்டுள்ளது. பன்னாட்டளவில், மிக அதிகமான எண்ணிக்கையில் வேகமான விற்பனையை இந்த போன் பெற்றுள்ளது என ஆப்பிள் நிறுவனத் தலைமை அதிகாரி டிம் குக் கூறியுள்ளார். இதன் 16 ஜிபி மாடல் ரூ. 45,000, 32 ஜிபி மாடல் ரூ.52,000 மற்றும் 64 ஜிபி மாடல் ரூ.59,500 என விலையிடப்பட்டுள்ளன. சாம்சங் காலக்ஸி எஸ் 3 மற்றும் எச்.டி.சி. ஒன் எக்ஸ் போன்ற இதற்கு இணையான ஸ்மார்ட் போன்களைக் காட்டிலும், கூடுதலாக இது விலையிடப்பட்டிருந்தாலும், பலர் இதனை வாங்கிப் பயன்படுத்த ஆர்வம் காட்டி வருகின்றனர். முன் பதிவு செய்து பெற்று வருகின்றனர். பொதுவாக ஆப்பிள் நிறுவன சாதனங்கள் விற்பனை செய்திடும் கடைகளில் மட்டுமே, ஐ போன் விற்பனை செய்யப்படுவது வழக்கம். இம்முறை மற்ற விற்பனை மையங்களிலும் இந்த போன் விற்பனை செய்யப்படுகிறது. மேற்கு நாடுகளில் போல் அல்லாமல், இந்தியாவில் ஐபோன் பயன்பாடு குறைவுதான். இந்த போன் தரும் சில வசதிகளை (எ.கா. 4ஜி அலைவரிசை) இந்தியாவில் பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)