புதிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள குறைகள் நீக்கப்படும் புதிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள குறைகள் நீக்கப்படும் ... உணவு பொருள்கள் விலை உயர்வு உணவு பொருள்கள் விலை உயர்வு ...
வேளாண் துறை ஏற்றுமதி ரூ.1.31 லட்சம் கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 நவ
2012
05:24

புதுடில்லி: சென்ற 2011-12ம் நிதியாண்டில், நாட்டின் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி, இரண்டு மடங்கிற்கும் மேல் உயர்ந்து, 2,397 கோடி டாலராக (1.31 லட்சம் கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது.இது, 2010-11 மற்றும் 2009-10ம் நிதியாண்டுகளில் முறையே, 1,473 கோடி டாலர் (81,015 கோடி ரூபாய்) மற்றும் 1,056 கோடி டாலர் (58,080 கோடி ரூபாய்) என்ற அளவில் இருந்தது.அரிசி மற்றும் கோதுமை ஏற்றுமதி மீதான தடை நீக்கப்பட்டது. இந்திய நறுமணப் பொருட்கள், காபி, சர்க்கரை ஆகியவற்றிற்கு, அயல் நாடுகளில் தேவை அதிகரித்து வருகிறது.இதனால், நாட்டின் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி, சென்ற நிதியாண்டில், சிறப்பான அளவில் அதிகரித்துள்ளதாக, வர்த்தகம் மற்றும் தொழில் துறை இணை அமைச்சர் புரந்தேஸ்வரி, பார்லிமென்டில் தெரிவித்தார்.

மத்திய அரசு, சென்ற 2011ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், அரிசி மற்றும் கோதுமை ஏற்றுமதி மீதான தடையை நீக்கியது. இதன் விளைவாக, சென்ற நிதியாண்டில், 172 கோடி டாலர் (9,460 கோடி ரூபாய்) மதிப்பிலான, 39 லட்சம் டன் அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டது. இது, கடந்த 2009-10ம் நிதியாண்டில், 7.60 கோடி டாலர் (418 கோடி ரூபாய்) என்ற அளவில் இருந்தது.பாசுமதி அரிசி ஏற்றுமதி, அளவின் அடிப்படையில், 31.70 டன்னாகவும், மதிப்பின் அடிப்படையில், 320 கோடி டாலராகவும் (17,600 கோடி ரூபாய்) உயர்ந்திருந்தது. இதனால், சென்ற 2011-12ம் நிதியாண்டில், நாட்டின் ஒட்டுமொத்த அரிசி ஏற்றுமதி, 70 லட்சம் டன்னாக அதிகரித்து காணப்பட்டது.மத்திய அரசு, உணவு தானியங்கள் உள்ளிட்ட, வேளாண் பொருட்கள் ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில், பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.குறிப்பாக, தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு தானியங்கள் கையிருப்பு, உபரி, சாதாரண மனிதனும் வாங்கும் வகையில் சந்தை விலை உள்ளதா என்பது போன்ற பல அம்சங்களின் அடிப்படையிலேயே சலுகைகள் வழங்கப்படுகின்றன.

சென்ற நிதியாண்டில், 183 கோடி டாலர் மதிப்பிலான, 27.40 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்யப்பட்டது. இது, கடந்த 2010-11 மற்றும் 2009-10ம் நிதியாண்டுகளில் முறையே, 119 கோடி டாலர் மற்றும் 2.30 கோடி டாலர் என்ற அளவில் இருந்தன.கடந்த மூன்று ஆண்டுகளாக, காபி, தேயிலை, நறுமணப்பொருட்கள், நிலக்கடலை, கொத்தவரை, கோதுமை ஆகிய வேளாண் பொருட்களின் ஏற்றுமதி சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது.கடந்த 2009-10ம் நிதியாண்டில், 43 கோடி டாலராக இருந்த, நாட்டின் காபி ஏற்றுமதி, சென்ற 2011-12ம் நிதியாண்டில், 95.20 கோடி டாலராக அதிகரித்துள்ளது. மதிப்பீட்டு காலத்தில், மிளகாய், ஏலக்காய், மஞ்சள், மிளகு உள்ளிட்ட நறுமணப்பொருட்கள் ஏற்றுமதி, 130 கோடி டாலரிலிருந்து, 275 கோடி டாலராக உயர்ந்துள்ளது.இந்திய வேளாண் பொருட்கள் ஏற்றுமதி அதிகரித்துள்ள நிலையில், சமையல் எண்ணெய், பருப்பு வகைகள், முந்திரி, பழங்கள் போன்ற வேளாண் பொருட்களின் இறக்குமதியும் உயர்ந்துள்ளது.

இதில், சமையல் எண்ணெயின் பங்களிப்பே, மிகவும் அதிகமாக உள்ளது.சென்ற நிதியாண்டில், நாட்டின், வேளாண் பொருட்கள் இறக்குமதி, 1,429 கோடி டாலராக (78,595 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது. இது, 2009-10ம் நிதியாண்டில், 1,070 கோடி டாலரர் என்ற அளவில் இருந்தது.கணக்கீட்டு காலத்தில், தாவர எண்ணெய் இறக்குமதி, 560 கோடி டாலரிலிருந்து, 966 கோடி டாலராக அதிகரித்துள்ளது.@மலும், முந்திரி இறக்குமதி, 64 கோடி டாலரிலிருந்து, 113 கோடி டாலராகவும், பருப்பு வகைகள் இறக்குமதி, 185 கோடி டாலரிலிருந்து, 207 கோடி டாலராகவும் உயர்ந்துள்ளன என, அமைச்சர் புரந்தேஸ்வரி மேலும் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)