பதிவு செய்த நாள்
28 நவ2012
05:24
புதுடில்லி:
சென்ற 2011-12ம் நிதியாண்டில், நாட்டின் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி,
இரண்டு மடங்கிற்கும் மேல் உயர்ந்து, 2,397 கோடி டாலராக (1.31 லட்சம் கோடி
ரூபாய்) அதிகரித்துள்ளது.இது, 2010-11 மற்றும் 2009-10ம் நிதியாண்டுகளில்
முறையே, 1,473 கோடி டாலர் (81,015 கோடி ரூபாய்) மற்றும் 1,056 கோடி டாலர்
(58,080 கோடி ரூபாய்) என்ற அளவில் இருந்தது.அரிசி மற்றும் கோதுமை ஏற்றுமதி
மீதான தடை நீக்கப்பட்டது. இந்திய நறுமணப் பொருட்கள், காபி, சர்க்கரை
ஆகியவற்றிற்கு, அயல் நாடுகளில் தேவை அதிகரித்து வருகிறது.இதனால், நாட்டின்
வேளாண் பொருட்கள் ஏற்றுமதி, சென்ற நிதியாண்டில், சிறப்பான அளவில்
அதிகரித்துள்ளதாக, வர்த்தகம் மற்றும் தொழில் துறை இணை அமைச்சர்
புரந்தேஸ்வரி, பார்லிமென்டில் தெரிவித்தார்.
மத்திய அரசு, சென்ற 2011ம்
ஆண்டு, செப்டம்பர் மாதம், அரிசி மற்றும் கோதுமை ஏற்றுமதி மீதான தடையை
நீக்கியது. இதன் விளைவாக, சென்ற நிதியாண்டில், 172 கோடி டாலர் (9,460 கோடி
ரூபாய்) மதிப்பிலான, 39 லட்சம் டன் அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டது. இது,
கடந்த 2009-10ம் நிதியாண்டில், 7.60 கோடி டாலர் (418 கோடி ரூபாய்) என்ற
அளவில் இருந்தது.பாசுமதி அரிசி ஏற்றுமதி, அளவின் அடிப்படையில், 31.70
டன்னாகவும், மதிப்பின் அடிப்படையில், 320 கோடி டாலராகவும் (17,600 கோடி
ரூபாய்) உயர்ந்திருந்தது. இதனால், சென்ற 2011-12ம் நிதியாண்டில், நாட்டின்
ஒட்டுமொத்த அரிசி ஏற்றுமதி, 70 லட்சம் டன்னாக அதிகரித்து
காணப்பட்டது.மத்திய அரசு, உணவு தானியங்கள் உள்ளிட்ட, வேளாண் பொருட்கள்
ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில், பல்வேறு சலுகைகளை வழங்கி
வருகிறது.குறிப்பாக, தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு தானியங்கள்
கையிருப்பு, உபரி, சாதாரண மனிதனும் வாங்கும் வகையில் சந்தை விலை உள்ளதா
என்பது போன்ற பல அம்சங்களின் அடிப்படையிலேயே சலுகைகள்
வழங்கப்படுகின்றன.
சென்ற நிதியாண்டில், 183 கோடி டாலர் மதிப்பிலான, 27.40
லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்யப்பட்டது. இது, கடந்த 2010-11 மற்றும்
2009-10ம் நிதியாண்டுகளில் முறையே, 119 கோடி டாலர் மற்றும் 2.30 கோடி டாலர்
என்ற அளவில் இருந்தன.கடந்த மூன்று ஆண்டுகளாக, காபி, தேயிலை,
நறுமணப்பொருட்கள், நிலக்கடலை, கொத்தவரை, கோதுமை ஆகிய வேளாண் பொருட்களின்
ஏற்றுமதி சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது.கடந்த 2009-10ம்
நிதியாண்டில், 43 கோடி டாலராக இருந்த, நாட்டின் காபி ஏற்றுமதி, சென்ற
2011-12ம் நிதியாண்டில், 95.20 கோடி டாலராக அதிகரித்துள்ளது. மதிப்பீட்டு
காலத்தில், மிளகாய், ஏலக்காய், மஞ்சள், மிளகு உள்ளிட்ட நறுமணப்பொருட்கள்
ஏற்றுமதி, 130 கோடி டாலரிலிருந்து, 275 கோடி டாலராக உயர்ந்துள்ளது.இந்திய
வேளாண் பொருட்கள் ஏற்றுமதி அதிகரித்துள்ள நிலையில், சமையல் எண்ணெய்,
பருப்பு வகைகள், முந்திரி, பழங்கள் போன்ற வேளாண் பொருட்களின் இறக்குமதியும்
உயர்ந்துள்ளது.
இதில், சமையல் எண்ணெயின் பங்களிப்பே, மிகவும் அதிகமாக
உள்ளது.சென்ற நிதியாண்டில், நாட்டின், வேளாண் பொருட்கள் இறக்குமதி, 1,429
கோடி டாலராக (78,595 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது. இது, 2009-10ம்
நிதியாண்டில், 1,070 கோடி டாலரர் என்ற அளவில் இருந்தது.கணக்கீட்டு
காலத்தில், தாவர எண்ணெய் இறக்குமதி, 560 கோடி டாலரிலிருந்து, 966 கோடி
டாலராக அதிகரித்துள்ளது.@மலும், முந்திரி இறக்குமதி, 64 கோடி
டாலரிலிருந்து, 113 கோடி டாலராகவும், பருப்பு வகைகள் இறக்குமதி, 185 கோடி
டாலரிலிருந்து, 207 கோடி டாலராகவும் உயர்ந்துள்ளன என, அமைச்சர்
புரந்தேஸ்வரி மேலும் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|