பதிவு செய்த நாள்
03 டிச2012
18:44
மும்பை : 19 மாதங்களுக்கு பின்னர் கடந்த நான்கு நாட்களாக அதிக ஏற்றத்துடன் இருந்த இந்திய பங்குசந்தைகள் வாரத்தின் முதல்நாளில்(03.12.12) சரிவுடன் முடிந்து இருக்கிறது. நல்ல லாபம் கிடைத்ததால் பங்குமுதலீட்டாளர்கள் தங்களது பங்குகளை அதிகளவில் விற்பனை செய்ததால் இந்த சரிவு காணப்பட்டதாக முதலீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 34.58 புள்ளிகள் சரிந்து 19,305.32 எனும் அளவிலும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 8.90 புள்ளிகள் சரிந்து 5,870.95 எனும் அளவிலும் முடிந்தது. மும்பை பங்குசந்தையை அளவிட உதவும் 30 பங்குகளில், 17 பங்குகளின் விலை சரிவுடனும், 13 பங்குகளின் விலை ஏற்றத்துடனும் முடிந்தன. குறிப்பாக ஹெச்.எப்.டி.சி., உள்ளிட்ட வங்கி நிறுவன பங்குகள் விலை சரிந்து காணப்பட்டன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|