பதிவு செய்த நாள்
11 டிச2012
00:59
புதுடில்லி:கரும்பு உற்பத்தி குறைவால், நடப்பு சர்க்கரை பருவத்தில் (அக்.,-செப்.,), நாட்டின் எத்தனால் உற்பத்தி, 16 சதவீதம் குறைந்து, 259 கோடி லிட்டராக சரிவடையும். இது, கடந்த 2011-12ம் நிதியாண்டில், 307 கோடி லிட்டராகவும், 2010-11ம் நிதியாண்டில், 263 கோடி லிட்டராகவும் இருந்தது என, மத்திய உணவு அமைச்சர் கே.வி.தாமஸ் பார்லிமென்டில் தெரிவித்தார்.
நடப்பு பருவத்தில், நாட்டின் சர்க்கரை உற்பத்தி, 2.30 கோடி டன்னாக குறையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இது, கடந்த 2011-12ம் பருவத்தில், 2.63 கோடி டன்னாக அதிகரித்து காணப்பட்டது.ஆக, நடப்பு பருவத்தில், சர்க்கரை உற்பத்தி, 13 சதவீதம் சரிவடையும் என, எதிர்பார்க்கபடுகிறது.சர்க்கரை உற்பத்தியின் போது, பாகுக் கழிவு கிடைக்கிறது. இதிலிருந்து, எத்தனால் அல்லது ஆல்கஹால் தயார் செய்யப்படுகிறது. நாட்டின் எத்தனால் உற்பத்தியில், உத்தரபிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்கள் முன்னிலை வகிக்கின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|