பதிவு செய்த நாள்
14 டிச2012
00:27
மும்பை:சென்ற நவம்பர் மாதத்தில், நாட்டின் தாவர எண்ணெய் இறக்குமதி, 7 லட்சம் டன்னாக குறைந்துள்ளது என, இந்திய எண்ணெய் உற்பத்தியாளர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.இந்தியா, அதிக அளவில், கச்சா எண்ணெய் மற்றும் சமையல் எண்ணெய் வகைகளை இறக்குமதி செய்து கொள்கிறது. நடப்பு பருவத்தில், உள்நாட்டில், சோயா எண்ணெய்க்கான தேவை உயர்ந்துள்ளது. அதை ஈடு செய்யும் விதத்தில், சோயா எண்ணெய் உற்பத்தி அதிகரித்துள்ளது.
இதன் தாக்கத்தால், நாட்டின் தாவர எண்ணெய் இறக்குமதி குறைந்துள்ளது. நடப்பாண்டு நவம்பர் மாதத்தில், நாட்டின் தாவர எண்ணெய் இறக்குமதி, 7 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. இது, சென்ற நிதியாண்டின், இதே மாதத்தில், மேற்கொள்ளப்பட்ட இறக்குமதியை (8.55 லட்சம் டன்) விட, 18 சதவீதம் குறைவாகும்.
நடப்பு டிசம்பர் 1ம் தேதி வரையிலுமாக, சமையல் எண்ணெய் கையிருப்பு, 6.55 லட்சம் டன் என்ற அளவில் இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இதில், கச்சா பாமாயில் பங்களிப்பு, 4.60 லட்சம் டன் என்ற அளவிலும், சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் பங்களிப்பு, 75 ஆயிரம் டன் என்ற அளவிலும் இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், சோயா எண்ணெய் 40 ஆயிரம் டன்னும், சூரிய காந்தி எண்ணெய், 70 ஆயிரம் டன்னும் கையிருப்பில் உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|