பதிவு செய்த நாள்
14 டிச2012
00:29
புதுடில்லி:நடப்பாண்டு அக்டோபர் மாதத்தில், அலைபேசி சேவை வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, 90.42 கோடியாக குறைந்துள்ளது. இது, சென்ற செப்டம்பர் மாத எண்ணிக்கையை (90.66 கோடி பேர்) விட, 0.26 சதவீதம் குறைவாகும்.பார்தி ஏர்டெல்மதிப்பீட்டு மாதத்தில், நாட்டின், ஒட்டுமொத்த தொலைதொடர்பு வாடிக்கையாளர் எண்ணிக்கை, 26 லட்சம் குறைந்து, 93.77 கோடியிலிருந்து, 93.51 கோடியாக சரிவடைந்து உள்ளது என, இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தெரிவித்துள்ளது.
அலைபேசி சேவையை பயன்படுத்தாமல் இருந்த, வாடிக்கையாளர்களின் எண்கள், இச்சேவையில் இருந்து நீக்கப்பட்டன. இதனால், சென்ற அக்டோபரில், அதிக அளவில் அலைபேசி வாடிக்கையாளர் எண்ணிக்கை குறைந்து போயுள்ளது.சென்ற, அக்டோபர் மாதத்தில், பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை, 4.91 லட்சம் அதிகரித்துள்ளது.
இதையடுத்து, இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த அலைபேசி வாடிக்கையாளர் எண்ணிக்கை, 18.64 கோடியாக உயர்ந்துள்ளது.இதைத்தொடர்ந்து, வோடபோன் நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை, 4.80 லட்சம் உயர்ந்து, 15.31 கோடியாக அதிகரித்துள்ளது. பீ.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை, 3.57 லட்சம் அதிகரித்து, 10 கோடியாகவும், ஐடியா செல்லுலார் நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை, 2.39 லட்சம் உயர்ந்து, 11.57 கோடியாகவும் உயர்ந்துள்ளன.
அதேசமயம், டாட்டா டெலிசர்வீசஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை, 16 லட்சம் சரிவடைந்து, 7.67 கோடியாக குறைந்துள்ளது.சாதாரண தொலைபேசியூனிநார் நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை, 11 லட்சம் குறைந்து, 4.10 கோடியாகவும், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை, 8.44 லட்சம் சரிவடைந்து, 13.40 கோடியாகவும் குறைந்துள்ளன.
சென்ற அக்டோபர் மாதத்தில், உள்நாட்டில், சாதாரண தொலைபேசி பயன்பாடுத்தும் வாடிக்கையாளர் எண்ணிக்கை, 3.09 கோடியாக குறைந்துள்ளது. இது, முந்தைய செப்டம்பர் மாதத்தில், 3.10 கோடி என்ற அளவில் உயர்ந்திருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|