அலைபேசி வாடிக்கையாளர் எண்ணிக்கை 90.42 கோடிஅலைபேசி வாடிக்கையாளர் எண்ணிக்கை 90.42 கோடி ... விளைச்சல் குறைந்ததால் நெல்லுக்கு கடும் தட்டுப்பாடு:வட மாநிலங்களுக்கு செல்லும் தமிழக ஆலை உரிமையாளர்கள் விளைச்சல் குறைந்ததால் நெல்லுக்கு கடும் தட்டுப்பாடு:வட மாநிலங்களுக்கு ... ...
வீடு, கோவில்களில் உள்ள தங்கத்தை கடனாக பெற்றால் இறக்குமதி குறையும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 டிச
2012
00:31

வீடுகள் மற்றும் கோவில்களில் குவிந்துள்ள தங்கத்தில், 10 சதவீதத்தை கடனாக பெற்றால், தங்கம் இறக்குமதியை குறைக்கலாம் என, நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.தங்கம் பயன்பாடு:இதுகுறித்து இக்கூட்டமைப்பின் தலைவர் பச்ராஜ் பமல்வா கூறியதாவது:உலகிலேயே அதிக அளவில் தங்கம் பயன்படுத்தும் நாடாக இந்திய விளங்குகிறது. அது போன்று தங்கம் இறக்குமதியிலும் முன்னணியில் உள்ளது.
மேலும், நாட்டின் கச்சா எண்ணெய் தேவையில், 80 சதவீதம் இறக்குமதி மூலமாகவே பூர்த்தி செய்து கொள்ளப்படுகிறது.இதனால், நாட்டின் இறக்குமதி செலவு அதிகரித்து, வர்த்தக பற்றாக்குறையும், நடப்பு கணக்கு பற்றாக்குறையும் வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து வருகின்றன.மேலும், இது அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பு வீழ்ச்சி காணவும் வழிவகுத்துள்ளது.
இறக்குமதி:பெரும் சுமையாக உள்ள இப்பிரச்னைக்கு, தங்கம் இறக்குமதியை குறைப்பது தான் உடனடி தீர்வாக இருக்கும்.இந்திய இல்லங்கள் மற்றும் கோவில்களில், 25 ஆயிரம் டன் தங்கம், தேங்கிக் கிடப்பதாக தெரியவந்துள்ளது.இந்த தங்கத்தில், 10 சதவீதத்தை கடனாகப் பெற, தேவையான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். மத்திய அரசு, மூன்றாண்டுகளுக்கு தங்கம் இறக்குமதியை நிறுத்த வேண்டும்.
ரிசர்வ் வங்கி வாயிலாக இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டால், மூன்று ஆண்டுகளில், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக் குறை கணிசமாக குறையும். அதே சமயம், தங்கத்தின் விலையும் சரிவடையும். இத்துடன், எவ்வளவு விலையென்றாலும், தங்க ஆபரணங்களை வாங்கிக் குவிக்கும் போக்கும் கட்டுக்குள் வரும். இவ்வாறு பச்ராஜ் பமல்வா தெரிவித்தார்.
பொருளாதாரம்கடந்த பத்தாண்டுகளில், நாட்டின் பொருளாதாரம், சராசரியாக, 7.8 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. மக்களின் செலவிடும் வருவாய் அதிகரித்து வருவதால், தங்க ஆபரணங்கள், கார், தொலைகாட்சி, குளிர்சாதனங்களின் விற்பனையும் உயர்ந்துள்ளது.இதே காலத்தில், உள்நாட்டில் தங்கத்திற்கான தேவை, ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த மூன்றாண்டுகளில், இந்தியாவின் தங்கம் இறக்குமதி இரு மடங்கிற்கும் மேல் உயர்ந்து உள்ளது.
இத்தகைய தாக்கத்தால், நடப்பு ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிந்த காலாண்டில், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை, சாதனை அளவாக 2,180 கோடி டாலரை எட்டியது. இது, ஜூன் வரையிலான காலாண்டில், 1,660 கோடி டாலராக இருந்தது.முதலீட்டு திட்டம்நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரித்ததால், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு, நடப்பாண்டில், 2.2 சதவீதம் குறைந்துள்ளது.
ஒரு டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு, 54.25 ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது. சென்ற ஆண்டு, டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு, 16 சதவீதம் சரிவடைந்தது.ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால், இறக்குமதி செலவினம் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு, 969 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. தங்கம் இறக்குமதியை கட்டுப் படுத்த, தங்க முதலீட்டு திட்டம் ஒன்றை மத்திய அரசு அறிமுகப் படுத்த உள்ளதாக, ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் சுபிர் கோகர்ன் தெரிவித்துள்ளார்.- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)