பதிவு செய்த நாள்
16 டிச2012
14:38
ராமநாதபுரம்: வரத்து குறைவால், ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன் விலை உயர்ந்துள்ளது. ராமேஸ்வரம், பாம்பன், கீழக்கரை உள்ளிட்ட பல பகுதி மீனவர்களுக்கு கடலில் குறைந்தளவே மீன் கிடைக்கிறது. இதனால் 280 ரூபாய்க்கு விற்ற சீலா 300க்கும், 140க்கு விற்ற ஊழா 150க்கும், 90 க்கு விற்ற களிங்கன் முரல் 100க்கும், 120க்கு விற்ற இறால் 130க்கும், 80க்கு விற்ற நகரை 90க்கும், 60க்கு விற்ற ஊழி 70க்கும், 70க்கு விற்ற விலமீன் 80க்கும், 40க்கு விற்ற திருக்கை 50 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. ராமநாதபுரம் மீன் வியாபாரி சுப்பிரமணி கூறுகையில், ""மழை பெய்தால் தான், கடலில் மீன் பாடு அதிகம் இருக்கும். மழை பொய்த்து போனதால், கடலும் கைவிரித்து விட்டது. வரத்துக் குறைவால் விலை அதிகரித்துள்ளது. டிச., 20 வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். மழை பெய்தால் விலை குறைய வாய்ப்புள்ளது,'' என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|