"பிரின்டர்' விற்பனை7.61 லட்சமாக குறைந்தது"பிரின்டர்' விற்பனை7.61 லட்சமாக குறைந்தது ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 உயர்வு  தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 உயர்வு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா குறித்தகால டெபாசிட் வரம்பை 3 நாட்களாக குறைக்க கோரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 டிச
2012
00:36

மும்பை:குறித்தகால டெபாசிட்டிற்கான வரம்பை, 7 நாட்களில் இருந்து, மூன்று நாட்களாக குறைக்க வேண்டும் என, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்.பீ.ஐ.,), ரிசர்வ் வங்கியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
வட்டி விகிதம்:இவ்வாண்டு துவக்கத்தில் எஸ்.பீ.ஐ., 7 நாட்கள் வரையிலான குறித்தகால டெபாசிட் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.துவக்கத்தில், இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் டெபாசிட்டிற்கான வட்டி, 8.50 சதவீதமாக இருந்தது. இது, தற்போது 6.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், மிகக் குறுகிய நாட்களுக்கு டெபாசிட் மேற்கொண்டாலும், சேமிப்பு கணக்கிற்கான, நான்கு சதவீத வட்டியை விட, கூடுதலாக கிடைப்பதால், இத்திட்டத்திற்கு வாடிக்கையாளர் களி டையே ஆதரவு பெருகி வருகிறது.இதனால், பிற வங்கிகளை விட, அதிக அளவிலான டெபாசிட்டை எஸ்.பீ.ஐ., திரட்டி வருகிறது.
நிதி புழக்கம்:இந்த வகையில், இவ்வங்கியிடம், கூடுதலாக, 55 ஆயிரம் கோடி முதல், 60 ஆயிரம் கோடி ரூபாய் வரை நிதிப் புழக்கம் உள்ளது.இந்நிலையில், குறித்த கால டெபாசிட்டிற்கான முதலீட்டு காலத்தை, மூன்று நாட்களாக குறைக்க வேண்டும் என, எஸ்.பீ.ஐ., வலியுறுத்தியுள்ளது. இதனால், அதிக அளவில் குறித்த கால டெபாசிட்டை திரட்ட முடியும் என, இவ்வங்கி கருதுகிறது.தற்போது நடப்பு கணக்கில் உள்ள தொகைக்கு வட்டி வழங்கப்படுவதில்லை. குறித்தகால டெபாசிட்டிற்கான கால வரம்பை மூன்று நாட்களாக குறைத்தால், நடப்பு கணக்கு வாடிக்கையாளர்களும், இத்திட்டத்தில் டெபாசிட் செய்வார்கள் என, எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பு கணக்கு:எஸ்.பீ.ஐ., முன்னதாக, நடப்பு கணக்கில் உள்ள தொகைக்கு வட்டி வழங்க அனுமதிக்க வேண்டும் என, கோரியிருந்தது. ஆனால், வங்கி விதிகளின்படி, இதற்கு அனுமதி இல்லை என, ரிசர்வ் வங்கி மறுத்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)