பதிவு செய்த நாள்
22 டிச2012
00:36
மும்பை:குறித்தகால டெபாசிட்டிற்கான வரம்பை, 7 நாட்களில் இருந்து, மூன்று நாட்களாக குறைக்க வேண்டும் என, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்.பீ.ஐ.,), ரிசர்வ் வங்கியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
வட்டி விகிதம்:இவ்வாண்டு துவக்கத்தில் எஸ்.பீ.ஐ., 7 நாட்கள் வரையிலான குறித்தகால டெபாசிட் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.துவக்கத்தில், இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் டெபாசிட்டிற்கான வட்டி, 8.50 சதவீதமாக இருந்தது. இது, தற்போது 6.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், மிகக் குறுகிய நாட்களுக்கு டெபாசிட் மேற்கொண்டாலும், சேமிப்பு கணக்கிற்கான, நான்கு சதவீத வட்டியை விட, கூடுதலாக கிடைப்பதால், இத்திட்டத்திற்கு வாடிக்கையாளர் களி டையே ஆதரவு பெருகி வருகிறது.இதனால், பிற வங்கிகளை விட, அதிக அளவிலான டெபாசிட்டை எஸ்.பீ.ஐ., திரட்டி வருகிறது.
நிதி புழக்கம்:இந்த வகையில், இவ்வங்கியிடம், கூடுதலாக, 55 ஆயிரம் கோடி முதல், 60 ஆயிரம் கோடி ரூபாய் வரை நிதிப் புழக்கம் உள்ளது.இந்நிலையில், குறித்த கால டெபாசிட்டிற்கான முதலீட்டு காலத்தை, மூன்று நாட்களாக குறைக்க வேண்டும் என, எஸ்.பீ.ஐ., வலியுறுத்தியுள்ளது. இதனால், அதிக அளவில் குறித்த கால டெபாசிட்டை திரட்ட முடியும் என, இவ்வங்கி கருதுகிறது.தற்போது நடப்பு கணக்கில் உள்ள தொகைக்கு வட்டி வழங்கப்படுவதில்லை. குறித்தகால டெபாசிட்டிற்கான கால வரம்பை மூன்று நாட்களாக குறைத்தால், நடப்பு கணக்கு வாடிக்கையாளர்களும், இத்திட்டத்தில் டெபாசிட் செய்வார்கள் என, எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பு கணக்கு:எஸ்.பீ.ஐ., முன்னதாக, நடப்பு கணக்கில் உள்ள தொகைக்கு வட்டி வழங்க அனுமதிக்க வேண்டும் என, கோரியிருந்தது. ஆனால், வங்கி விதிகளின்படி, இதற்கு அனுமதி இல்லை என, ரிசர்வ் வங்கி மறுத்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|