பதிவு செய்த நாள்
24 டிச2012
00:27
புதுடில்லி:நடப்பு வேளாண் பருவத்தில், உணவு தானியங்கள் சாகுபடி பரப்பளவு குறைந்துள்ளது. இதனால், இவற்றின் உற்பத்தி குறையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.உள்நாட்டில், தாமதமான மற்றும் குறைவான மழைப் பொழிவால், அண்மையில் முடிவுற்ற கரீப் பருவத்தில், நெல் சாகுபடி பரப்பளவு குறைந்துள்ளது. இதனால், நெல் உற்பத்தி, கடந்த பருவத்தை விட, நடப்பு பருவத்தில் குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
பஞ்சாப்:நடப்பு ரபி பருவத்தில், சென்ற 21ம் தேதி வரையிலுமாக, 2.53 கோடி ஹெக்டேரில் கோதுமை பரியிடப்பட்டுள்ளது. இது, சென்ற பருவத்தின், இதே காலத்தில், 2.57 கோடி ஹெக்டேராக உயர்ந்திருந்தது.இந்தியாவில் கோதுமை சாகுபடியில், பஞ்சாப், அரியானா மாநிலங்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. நடப்பு பருவத்தில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், அசாம், பீகார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில், கோதுமை சாகுபடி பரப்பளவு அதிகரித்துள்ளது.
அதேசமயம், மகாராஷ்டிரா, உத்தரகாண்ட், குஜராத், மேற்கு வங்கம், கர்நாடகா, அரியானா ஆகிய மாநிலங்களில் இதன் சாகுபடி பரப்பளவு குறைந்துள்ளது.சென்ற வேளாண் பருவத்தில், சாதகமான பருவ நிலை நிலவியதால், கோதுமை உற்பத்தி, சாதனை அளவாக, 9.93 கோடி டன்னாக அதிகரித்திருந்தது. நடப்பு பருவத்தில், பருவ மழை குறைந்துள்ளதால், 8.60 கோடி டன் கோதுமை உற்பத்தி செய்ய, மத்திய வேளாண் அமைச்சகம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
நெல் சாகுபடி :நடப்பு பருவத்தில், நெல் சாகுபடி பரப்பளவு, 2.78 லட்சம் ஹெக்டேரிலிருந்து, 1.71 லட்சம் ஹெக்டேராக குறைந்துஉள்ளது. பருப்பு வகைகள் சாகுபடி பரப்பளவு, 1.29 கோடி ஹெக்டேரிலிருந்து, 1.28 கோடி ஹெக்டேராக குறைந்துள்ளது.நிலக்கடலை, சூரியகாந்தி எண்ணெய் வித்துக்கள் சாகுபடி பரப்பளவு, 5 சதவீதம் உயர்ந்து, 76 லட்சம் ஹெக்டேரிலிருந்து, 80 லட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது.
இதில், நிலக்கடலை சாகுபடி பரப்பளவு, 54.4 சதவீதம் வளர்ச்சிகண்டு, 3.44 லட்சம் ஹெக்டேரிலிருந்து, 5.32 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது. சூரியகாந்தி 20.6 சதவீதம் வளர்ச்சிஅடைந்து, 4.76 லட்சம் ஹெக்டேராகஉயர்ந்துள்ளது. கடுகு சாகுபடி பரப்பளவு, 2.8 சதவீதம் உயர்ந்து, 62.60 லட்சம் ஹெக்டேரிலிருந்து, 64.40 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|