பதிவு செய்த நாள்
24 டிச2012
00:21
கொச்சி:நடப்பாண்டில், தமிழகம் மற்றும் கர்நாடகாவில் இருந்து, கொப்பரை வரத்து அதிகரித்துள்ளது. இதனால், தேங்காய் எண்ணெய் விலை குறைய வாய்ப்புள்ளதாக, இத்துறையைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் தெரிவித்தார்.விளைச்சல் அதிகரித்துள்ளதன் காரணமாக, இலங்கைக்கு போட்டியாக, நம்நாட்டின் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் ஏற்றுமதி சூடுபிடிக்கத் துவங்கிஉள்ளது.
குறிப்பாக, கேரள மக்கள் அதிகளவில் இடம்பெயர்ந்து வசிக்கும், மத்திய கிழக்கு நாடுகளுக்கு, இவற்றின் ஏற்றுமதி, சிறப்பான அளவில் உயர்ந்துள்ளது.இதை எடுத்துகாட்டும் வகையில், நடப்பாண்டு ஜூலை மாதம் வரையிலான காலத்தில், அளவின் அடிப்படையிலான இவற்றின் ஏற்றுமதி, 50 சதவீத அளவிற்கும், மதிப்பின் அடிப்படையிலான ஏற்றுமதி, 22 சதவீத அளவிற்கும் வளர்ச்சி கண்டுள்ளது.நம்நாட்டிலிருந்து, 2011 - 12ம் பருவத்தில், 24,345 டன் தேங்காய் ஏற்றுமதியாகி உள்ளது.
இதன் மதிப்பு, 52 கோடி ரூபாயாகும் என, இந்திய தேங்காய் வாரியம் தெரிவித்து உள்ளது.இதை மேலும் அதிகரிக்கும் வகையில், தென் மாநில துறைமுகங்களிலிருந்து ஏற்றுமதியாகும், தேங்காய் எண்ணெய்க்கான அளவின் மீதான கட்டுப்பாடுகளை நீக்கி, பெருமளவு ஏற்றுமதி செய்ய அனுமதிக்க வேண்டும் என, மத்திய அரசிடம், தேங்காய் வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|