தங்கம் விலையில் மாற்றம் இல்லைதங்கம் விலையில் மாற்றம் இல்லை ... ஒரே நாளில் 50 ஆயிரம் பயணிகள் ஏர் - இந்தியா புதிய சாதனை ஒரே நாளில் 50 ஆயிரம் பயணிகள் ஏர் - இந்தியா புதிய சாதனை ...
பாசுமதி அரிசி விலை விர்ர்...விற்பனை, ஏற்றுமதி பாதிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 டிச
2012
00:21

புதுடில்லி:பாசுமதி அரிசி உற்பத்தி குறைந்துள்ளதால், அதன் விலை உயர்ந்து வருகிறது. இதனால், இதன் உள்நாட்டு பயன்பாடும், ஏற்றுமதியும் குறையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.சென்ற 2011-12ம் நிதியாண்டில், இந்தியாவில், 42.50 லட்சம் டன் பாசுமதி அரிசி உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால், நடப்பு 2012-13ம் நிதி யாண்டில், இதன் உற்பத்தி, 10 சதவீதம் குறையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
இதன் எதிரொலியாக, உள்நாட்டில், பாசுமதி அரிசியின் விலை, 25 சதவீதமும், சர்வதேச சந்தையில், 25 முதல், 40 சதவீதம் வரையிலும் விலை உயர்ந்துள்ளது. இதனால், ஏற்றுமதியாளர்களின் லாப வரம்பு குறைந்துள்ளது.உள்நாட்டு சந்தையில், பிராண்டட் பாசுமதி அரிசி விலை, கிலோவுக்கு, 10-20 ரூபாய் வரை உயர்ந்து, 75 லிருந்து, 95 ரூபாயாக அதிகரித்துள்ளது.
இந்தியாவின் பாசுமதி அரிசிக்கு, சவுதிஅரேபியாவை அடுத்து ஈரானில் அதிக வரவேற்பு காணப்படுகிறது. ஆனால், ஈரான் உடனான பணப்பரிமாற்றப் பிரச்னையால், அந்நாட்டிற்கான, இந்தியாவின் பாசுமதி அரிசி ஏற்றுமதி குறைந்துள்ளது.எனினும், புதிய சந்தை வாய்ப்புகள் மூலம், பாசுமதி ஏற்றுமதியை அதிகரிக்கும் முயற் சியில் வர்த்தகர்கள் ஈடுபட்டுள்ளனர். நடப்பு நிதியாண்டில், 35 லட்சம் டன் பாசுமதி அரிசியை ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது, கடந்த நிதியாண்டில், 32 லட்சம் டன்னாக இருந்தது.நடப்பு நிதியாண்டில், தற்போது வரை, 21 லட்சம் டன் பாசுமதி அரிசி ஏற்றுமதிக்கு, பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)