பதிவு செய்த நாள்
26 டிச2012
00:21
புதுடில்லி:பாசுமதி அரிசி உற்பத்தி குறைந்துள்ளதால், அதன் விலை உயர்ந்து வருகிறது. இதனால், இதன் உள்நாட்டு பயன்பாடும், ஏற்றுமதியும் குறையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.சென்ற 2011-12ம் நிதியாண்டில், இந்தியாவில், 42.50 லட்சம் டன் பாசுமதி அரிசி உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால், நடப்பு 2012-13ம் நிதி யாண்டில், இதன் உற்பத்தி, 10 சதவீதம் குறையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
இதன் எதிரொலியாக, உள்நாட்டில், பாசுமதி அரிசியின் விலை, 25 சதவீதமும், சர்வதேச சந்தையில், 25 முதல், 40 சதவீதம் வரையிலும் விலை உயர்ந்துள்ளது. இதனால், ஏற்றுமதியாளர்களின் லாப வரம்பு குறைந்துள்ளது.உள்நாட்டு சந்தையில், பிராண்டட் பாசுமதி அரிசி விலை, கிலோவுக்கு, 10-20 ரூபாய் வரை உயர்ந்து, 75 லிருந்து, 95 ரூபாயாக அதிகரித்துள்ளது.
இந்தியாவின் பாசுமதி அரிசிக்கு, சவுதிஅரேபியாவை அடுத்து ஈரானில் அதிக வரவேற்பு காணப்படுகிறது. ஆனால், ஈரான் உடனான பணப்பரிமாற்றப் பிரச்னையால், அந்நாட்டிற்கான, இந்தியாவின் பாசுமதி அரிசி ஏற்றுமதி குறைந்துள்ளது.எனினும், புதிய சந்தை வாய்ப்புகள் மூலம், பாசுமதி ஏற்றுமதியை அதிகரிக்கும் முயற் சியில் வர்த்தகர்கள் ஈடுபட்டுள்ளனர். நடப்பு நிதியாண்டில், 35 லட்சம் டன் பாசுமதி அரிசியை ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது, கடந்த நிதியாண்டில், 32 லட்சம் டன்னாக இருந்தது.நடப்பு நிதியாண்டில், தற்போது வரை, 21 லட்சம் டன் பாசுமதி அரிசி ஏற்றுமதிக்கு, பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|