பதிவு செய்த நாள்
26 டிச2012
00:22
மும்பை:ஏர்-இந்தியா விமான நிறுவனம், ஒரே நாளில், 50 ஆயிரம் பயணிகளை ஏற்றி சென்று புதிய சாதனை படைத்துள்ளது.இந்நிறுவனம், உள்நாடு மற்றும் உலகின் பல்வேறு நாடுகளுக்கு, நாள்தோறும் 319 விமானச் சேவைகளை மேற்கொண்டு வருகிறது. சென்ற வெள்ளியன்று (டிசம்பர் 21) ஒரே நாளில், 50,765 பயணிகளை ஏற்றிச் சென்று, இந்நிறுவனம் புதிய சாதனை படைத்துள்ளது.
இதில், உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை, 35,246 ஆகவும், சர்வதேச விமான பயணிகளின் எண்ணிக்கை, 15,519 ஆகவும் இருந்தது. இதையடுத்து, ஒரே நாளில், இந்த விமான நிறுவனத்திற்கு கிடைத்த வருவாய், 48 கோடி ரூபாயை எட்டியுள்ளது. இதில், சர்வதேச பயணிகள் வாயிலாக கிடைத்த, 25 கோடி ரூபாயும் அடங்கும்.கடந்த மே மாதம், ஏர்-இந்தியா நிறுவனத்தின் விமானிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டு மாத போராட்டத்தின் போது, இதன் சர்வதேச விமானச் சேவைகள் குறைக்கப்பட்டன.
இந்த நிலையிலும், கடந்த ஏழு மாதங்களாக, இந்நிறுவனத்தின், உள்நாட்டு விமானச் சேவை குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்து வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|