பதிவு செய்த நாள்
27 டிச2012
00:10
புதுடில்லி:நடப்பு 12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2012-17), ரயில்வே துறை, அதன் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்காக, 5 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.இந்திய ரயில்வே, நாள்தோறும், 2.30 கோடி பயணிகளையும், 26.50 லட்சம் டன் சரக்கையும் கையாண்டு, சர்வதேச ரயில் சேவையில், மூன்றாவது மிகப் பெரிய நாடாகத் திகழ்கிறது.
அண்மையில் முடிவுற்ற, 11வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2007-12), ரயில்வே துறை, 1.09 லட்சம் கோடி ரூபாய் செலவிட இலக்கு நிர்ணயித்துஇருந்தது.இந்த நிதியை, ரயில்வேயின் துணை நிறுவனமான, இந்தியன் ரயில்வே பைனான்ஸ் கார்ப்பரேஷன் (ஐ.ஆர். எப்.சி.,) வாயிலாக, கடன் பத்திரங்கள், ரயில்வே பட்ஜெட், உள் வருவாய், அரசு மற்றும் தனியார் பங்கேற்பு ஆகியவற்றின் வாயிலாக திரட்டிக் கொண்டது.
வரும் ஜனவரி மாத இறுதியில், ஐ.ஆர்.எப்.சி., நிறுவனம், வரி விலக்குடன் கூடிய, கடன் பத்திரங்களை வெளியிட்டு, 10 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட முடிவு செய்துள்ளது. நடப்பு நிதியாண்டில், ரயில்வே பணிகளுக்காக, 60,100 கோடி ரூபாய் செலவிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. வருவாய் பற்றாக்குறையால், இது, 55,881 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
ரயில்வே கட்டமைப்பு பணிகளில், கட்டுதல், செயல்படுத்துதல், மாற்றுதல், ஒப்படைத்தல் ஆகியவற்றின் மூலம், தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்க, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.இதனால், ரயில்வே மேம்பாட்டுத் திட்டங்களில், அதிக அளவில், முதலீடு மேற்கொள்ளப்படும் என, ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|