பதிவு செய்த நாள்
02 ஜன2013
00:18
புதுடில்லி:அலைபேசியில், முன்பதிவு செய்த டிக்கெட்டை காட்டி, விமானத்தில் பயணம் செய்யும் திட்டம், அடுத்த சில நாட்களில் அறிமுகமாக உள்ளது.இதனால், விமான டிக்கெட்டை பிரிண்ட் எடுக்கும் வேலையும், பணமும் மிச்சமாகும் என்பதால், இத்திட்டம், விமான பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
ரயில் முன்பதிவு டிக்கெட்டை, அலைபேசி, "லேப்டாப்', "டேப்லெட்' சாதனங்களில் காண்பித்து பயணம் செய்யும் நடைமுறை, கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமலுக்கு வந்தது.இது போன்ற வசதி, இனி விமான பயணிகளுக்கும் கிடைக்க உள்ளது. இத்திட்டத்திற்கு, உள்நாட்டு விமான போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இத்திட்டம் அமலுக்கு வந்தால், அலைபேசி வாயிலாக, விமான பயணத்திற்கு முன்பதிவு செய்து விட்டு, "பிரின்ட்' எடுக்கும் கடைகளை தேடும் அலைச்சலும், பணமும் மிச்சமாகும்.மேலும், மின்சாரம் மற்றும் காகித பயன்பாடும் குறையும் என, அரசு உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விமான நிலையங்களில், அலைபேசி,"லேப்டாப்' "டேப்லெட்' போன்ற சாதனங்களில் இருந்து விமான பயண சீட்டை "பிரின்ட்' எடுத்து கொடுக்க, விமான சேவை நிறுவனங்கள், 50 ரூபாய் வசூலிக்கின்றன.புதிய திட்டத்தின் அறிமுகத்திற்கு பிறகு, இவ்வகையிலான வருவாயை விமான சேவை நிறுவனங்கள் இழக்கும் நிலை உண்டாகும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|