பதிவு செய்த நாள்
04 ஜன2013
00:42
புதுடில்லி:கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள ஏர்- இந்தியா நிறுவனத்தை, மறுசீரமைக்கும் நோக்கோடு, ஐந்து பேர் கொண்ட குழுவை, மத்திய அரசு அமைத்துள்ளது.பேராசிரியர் ரவீந்திர தோலாக்கியா தலைமையிலான இக்குழு, ஏர்-இந்தியா நிறுவனத்தின் செலவினங்களை குறைத்து, வருவாயை பெருக்குவதற்கு தேவையான பரிந்துரைகளை, இரண்டு மாதங்களில் வழங்கும்.
எனினும், விரைந்து நடவடிக்கை எடுப்பதற்காக, இறுதி அறிக்கைக்கு முன்பாக, இடைக்கால பரிந்துரையை வழங்குமாறு இக்குழுவிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக, ஏர்-இந்தியா செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். ஏர்-இந்தியா, மாதம், 404 கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறையால் திணறி வருகிறது. இதையடுத்து, விமான போக்குவரத்து துறை அமைச்சர் அஜீத்சிங் உத்தரவின் பேரில், இந்நிறுவனம் அதன் செலவினங்களை குறைத்து, நிதி ஆதாரங்களை பெருக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதனால், கடந்த சில மாதங்களாக, ஏர்-இந்தியாவின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. இதையடுத்து, நடப்பு நிதியாண்டில் இந்நிறுவனத்தின், வரிக்கு முந்தைய வருவாய், குறிப்பிடத்தக்க அளவிற்கு இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|