பதிவு செய்த நாள்
07 ஜன2013
23:53
மும்பை: இந்தியாவின் மருந்து துறை, சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. இந்நிலையில், மத்திய அரசு, பல்வேறு மருந்துகளின் விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில், புதிய கொள்கை திட்டத்தை அறிவிக்க உள்ளது. இதனால், இத்துறையின் ஆரோக்கியம், பாதிப்புக்குள்ளாகும் என, இத்துறையைச் சேர்ந்த ஒரு சில ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.இருப்பினும், அரசின் புதிய மருந்து கொள்கையால், இத்துறை வளர்ச்சியில், எவ்வித பாதிப்பும் ஏற்படாது. ஏனெனில், இத்துறை நிறுவனங்கள், அதிகளவில் ஏற்றுமதி மேற்கொள்வதால், இவற்றின் வருவாய் மற்றும் லாப வளர்ச்சியில், அதிக அளவிற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என்ற கருத்தும் நிலவுகிறது.சந்தை மதிப்புதற்போது, நாட்டின் மருந்து சந்தையின் மதிப்பு, 1 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், இதன் சந்தை மதிப்பு, 3.5 மடங்கிற்கும் மேல் அதிகரித்துள்ளது. உள்நாட்டில் செயல்படும், மிகப் பெரிய மருந்து நிறுவனங்களின் மொத்த வருவாயில், 70 சதவீதம், வெளிநாட்டு விற்பனை மூலம் கிடைக்கின்றது.வருவாய்இந்திய மருந்து நிறுவனங்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, பல பன்னாட்டு நிறுவனங்கள், கடந்த ஒரு சில மாதங்களாக, இந்திய நிறுவனங்களை கையகப்படுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த ஐந்து ஆண்டுகளில், இந்திய மருந்து நிறுவனங்களின் ஒட்டு மொத்த ஆண்டு வருவாய், 14 சதவீதம் என்ற அளவிலும், லாபம் 7 சதவீதம் என்ற அளவிலும் வளர்ச்சி கண்டு வருகிறது.மத்திய அரசு, அடுத்த 7 ஆண்டுகளில், இந்திய மருந்து சந்தையின் மதிப்பு, 5 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என, மதிப்பிட்டுள்ளது. வரும் 2015ம் ஆண்டில், உள்நாட்டில் மருந்து விற்பனை, 1.10 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என, மெக்கென்ஸி நிறுவனம் தெரிவித்துள்ளது.அத்தியாவசிய மருந்துகள்இந்நிலையில், மத்திய அரசு, 348 அத்தியாவசிய மருந்து பொருட்களின் விலையை ஒழுங்குபடுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டு அறிக்கை வெளியிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய கொள்கை திட்டம் அமல்படுத்தப்பட்டால், அது, நுகர்வோருக்கு மிகவும் பயனளிப்பதாக இருக்குமென, எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசின், புதிய விலைக் கொள்கை அறிவிக்கப்படும் நிலையில், பல முக்கிய மருந்துகளின் விலை, 40-70 சதவீதம் வரை குறையும். அதேசமயம், குறைந்த கால அடிப்படையில், மருந்து நிறுவனங்களின் லாபமும், 20 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது.புதிய விலைக் கொள்கை அறிவிக்கப்படும் நிலையில், அது, நுகர்வோருக்கு பயனளிக்கும். இதனால், பல முன்னணி நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சியில், அதிக பாதிப்பை ஏற்படுத்தாது. ஏற்றுமதிஏனெனில், பல பெரிய நிறுவனங்கள் உள்நாட்டு விற்பனையை விட, ஏற்றுமதியின் வாயிலாகவே அதிக வருவாய் ஈட்டி வருகின்றன. எனவே, மருந்து நிறுவனங்களின் லாபம் குறைய வாய்ப்பில்லை என, மருந்து துறையைச் சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்உள்நாட்டில் செயல்படும் பல மருந்து நிறுவனங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியில் அதிகம் ஈடுபடுவதில்லை. அதேசமயம், பன்னாட்டு நிறுவனங்கள், இந்த நடவடிக்கைகளுக்காக, அதிகளவில் செலவிடுகின்றன. குறிப்பாக, பல பன்னாட்டு நிறுவனங்கள், குறைந்த செலவில், இந்திய நிறுவனங்கள் வாயிலாகவே, புதிய மருந்துகள் கண்டுபிடிப்பிற்காக, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளை ஒப்பந்த அடிப்படையில், நிறைவேற்றிக் கொள்கின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|