பதிவு செய்த நாள்
10 ஜன2013
00:40
புதுடில்லி:சென்ற 2012ம் ஆண்டில், இந்தியாவிற்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, 66.48 லட்சமாக அதிகரித்துள்ளது. இது, கடந்த 2011ம் ஆண்டில் வந்த பயணிகளின் எண்ணிக்கையை (63.09 லட்சம் பேர்) விட, 5.4 சதவீதம் அதிகம் என, மத்திய சுற்றுலா அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
கணக்கீட்டு காலத்தில், அயல்நாட்டு சுற்றுலா பயணிகள் வாயிலாக கிடைத்த அன்னியச் செலாவணி வருவாய், 21.8 சதவீதம் வளர்ச்சிகண்டு, 77,591 கோடி ரூபாயிலிருந்து, 94,487 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.சென்ற டிசம்பர் மாதத்தில், இந்தியா வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, கடந்த 2011ம் ஆண்டின் இதே மாதத்தை விட, 1.7 சதவீதம் உயர்ந்து, 7.37 லட்சத்திலிருந்து, 7.50 லட்சம் என்ற எண்ணிக்கையில் அதிகரித்துள்ளது.
மதிப்பீட்டு காலத்தில், சுற்றுலா பயணிகள் வாயிலாக கிடைத்த அன்னியச் செலாவணி வருவாய், 18.9 சதவீதம் வளர்ச்சியடைந்து, 8,870 கோடியிலிருந்து, 10,549 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.கடந்த 2010ம் ஆண்டு, டிசம்பர் மாதத்தில், சுற்றுலா பயணிகள் மூலம் கிடைத்த அன்னியச் செலாவணி வருவாய், 7,039 கோடி ரூபாய் என்ற அளவில் இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|