பொது துறை வங்கிகளுக்கு ரூ.12,517 கோடி வழங்க ஒப்புதல் பொது துறை வங்கிகளுக்கு ரூ.12,517 கோடி வழங்க ஒப்புதல் ... உற்பத்தி குறைவால் சணல் பை பற்றாக்குறை மேலும் உயரும் உற்பத்தி குறைவால் சணல் பை பற்றாக்குறை மேலும் உயரும் ...
பங்கேற்பு ஆவணம் வாயிலானஅன்னிய முதலீடு அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜன
2013
23:46

மும்பை: சென்ற நவம்பர் மாதத்தில், அன்னிய நிதி நிறுவனங்கள், பங்கேற்பு ஆவணம் வாயிலாக, இந்திய பங்குச் சந்தைகளில் மேற்கொண்ட முதலீடு, 1.77 லட்சம் கோடி ரூபாய் (3,240 கோடி டாலர்) என்ற அளவில் உயர்ந்துள்ளது. இது, கடந்த ஒன்பது மாதங்களில் இல்லாத அதிக பட்ச அளவாகும் என, "செபி' அமைப்பு தெரிவித்துள்ளது.சென்ற ஆண்டு மே மாதத்தில், பங்குச் சந்தைகளில் மேற்கொள்ளப்பட்ட இவ்வகை முதலீடு, முந்தைய மூன்றாண்டுகளில் இல்லாத அளவிற்கு, 1,28,895 ரூபாயாக குறைந்து இருந்தது.பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு, பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் விளைவாக, கடந்த மூன்று மாதங்களாக, பங்கேற்பு ஆவணங்கள் வாயிலாக, அன்னிய நிதி நிறுவனங்கள் மேற்கொள்ளும் முதலீடு, சிறப்பான அளவில் அதிகரித்து வருவதாக, இத்துறையைச் சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.கடந்த 2009ம் ஆண்டு முதல், அன்னிய நிதி நிறுவனங்கள் மேற்கொள்ளும் மொத்த முதலீட்டில், பங்கேற்பு ஆவணங்களின் பங்களிப்பு, 15-20 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இது, கடந்த 2008ம் ஆண்டு, 25-40 சதவீதமாகவும், 2007ம் ஆண்டில், 50 சதவீதத்திற்கும் அதிகமாகவும் இருந்தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)