பதிவு செய்த நாள்
10 ஜன2013
23:46
மும்பை: சென்ற நவம்பர் மாதத்தில், அன்னிய நிதி நிறுவனங்கள், பங்கேற்பு ஆவணம் வாயிலாக, இந்திய பங்குச் சந்தைகளில் மேற்கொண்ட முதலீடு, 1.77 லட்சம் கோடி ரூபாய் (3,240 கோடி டாலர்) என்ற அளவில் உயர்ந்துள்ளது. இது, கடந்த ஒன்பது மாதங்களில் இல்லாத அதிக பட்ச அளவாகும் என, "செபி' அமைப்பு தெரிவித்துள்ளது.சென்ற ஆண்டு மே மாதத்தில், பங்குச் சந்தைகளில் மேற்கொள்ளப்பட்ட இவ்வகை முதலீடு, முந்தைய மூன்றாண்டுகளில் இல்லாத அளவிற்கு, 1,28,895 ரூபாயாக குறைந்து இருந்தது.பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு, பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் விளைவாக, கடந்த மூன்று மாதங்களாக, பங்கேற்பு ஆவணங்கள் வாயிலாக, அன்னிய நிதி நிறுவனங்கள் மேற்கொள்ளும் முதலீடு, சிறப்பான அளவில் அதிகரித்து வருவதாக, இத்துறையைச் சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.கடந்த 2009ம் ஆண்டு முதல், அன்னிய நிதி நிறுவனங்கள் மேற்கொள்ளும் மொத்த முதலீட்டில், பங்கேற்பு ஆவணங்களின் பங்களிப்பு, 15-20 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இது, கடந்த 2008ம் ஆண்டு, 25-40 சதவீதமாகவும், 2007ம் ஆண்டில், 50 சதவீதத்திற்கும் அதிகமாகவும் இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|