பங்கேற்பு ஆவணம் வாயிலானஅன்னிய முதலீடு அதிகரிப்பு பங்கேற்பு ஆவணம் வாயிலானஅன்னிய முதலீடு அதிகரிப்பு ... முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனையில் சரிவு நிலை : சொத்து விலை உயர்வு, அதிக வட்டியால்... முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனையில் சரிவு நிலை : சொத்து விலை உயர்வு, ... ...
உற்பத்தி குறைவால் சணல் பை பற்றாக்குறை மேலும் உயரும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜன
2013
23:48

புதுடில்லி: நடப்பு ரபி பருவத்தில் உற்பத்தியாகும், உணவு தானியங்களை அடைத்து வைப்பதற்கான, சணல் சாக்குப்பைக்கான பற்றாக்குறை, 37 சதவீத அளவிற்கு இருக்கும் என, பொருளாதார விவகாரங்களுக்கான, மத்திய அமைச்சரவை குழு மதிப்பீடு செய்துள்ளது.உள்நாட்டில், சணல் சாக்கு சிப்பமிடும் சட்டம், 1987ன் கீழ், சர்க்கரை மற்றும் உணவு தானிங்கள் அனைத்தும், சணல் சாக்குப் பையில் அடைத்தே விற்பனை செய்ய வேண்டும்.உணவு தானியங்கள்நடப்பு ரபி பருவத்தில் (டிசம்பர்-ஏப்ரல்), உற்பத்தி செய்யப்படும் உணவு தானியங்களை அடைக்க, 18.90 லட்சம் சணல் சாக்குப்பைகள் தேவை. அதேசமயம், இதன் அளிப்பு, 12.20 லட்சம் என்ற அளவிலேயே இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால், 6.70 லட்சம் சணல் சாக்குப்பைகளுக்கு பற்றாக்குறை ஏற்படும்.தற்போது, 10 சதவீத உணவு தானியங்களை, உயர் திறன் கொண்ட பாலித்தீன் அல்லது பாலிபுரோப்பிலீன் பைகளில் அடைத்து வைக்கும் வகையில், சணல் சாக்குப்பைக்கான சட்டத்தில் தளர்வு செய்யப்பட்டுள்ளது.எனவே, பற்றாக்குறையாக உள்ள சாக்குப்பை, பிளாஸ்டிக் மூலம் பூர்த்தி செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு சணல் சாக்குப்பை விலை, 28 ரூபாயாக உள்ளது. அதேசமயம், பிளாஸ்டிக் சாக்குப்பையின் விலை, 12 ரூபாய். ஆக, சணல் சாக்குப்பையுடன் ஒப்பிடும் போது, பிளாஸ்டிக் சாக்குப்பை விலை, 16 ரூபாய் குறைவாக உள்ளது.அனுமதிசர்க்கரை உற்பத்தியில் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள், 40 சதவீத சர்க்கரையை பிளாஸ்டிக் பைகளில், அடைத்து விற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, 10 சதவீத உணவு தானியங்களுக்கும், சணல் சாக்குப்பை பயன்பாட்டில் இருந்து, விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)