பதிவு செய்த நாள்
10 ஜன2013
23:48
புதுடில்லி: நடப்பு ரபி பருவத்தில் உற்பத்தியாகும், உணவு தானியங்களை அடைத்து வைப்பதற்கான, சணல் சாக்குப்பைக்கான பற்றாக்குறை, 37 சதவீத அளவிற்கு இருக்கும் என, பொருளாதார விவகாரங்களுக்கான, மத்திய அமைச்சரவை குழு மதிப்பீடு செய்துள்ளது.உள்நாட்டில், சணல் சாக்கு சிப்பமிடும் சட்டம், 1987ன் கீழ், சர்க்கரை மற்றும் உணவு தானிங்கள் அனைத்தும், சணல் சாக்குப் பையில் அடைத்தே விற்பனை செய்ய வேண்டும்.உணவு தானியங்கள்நடப்பு ரபி பருவத்தில் (டிசம்பர்-ஏப்ரல்), உற்பத்தி செய்யப்படும் உணவு தானியங்களை அடைக்க, 18.90 லட்சம் சணல் சாக்குப்பைகள் தேவை. அதேசமயம், இதன் அளிப்பு, 12.20 லட்சம் என்ற அளவிலேயே இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால், 6.70 லட்சம் சணல் சாக்குப்பைகளுக்கு பற்றாக்குறை ஏற்படும்.தற்போது, 10 சதவீத உணவு தானியங்களை, உயர் திறன் கொண்ட பாலித்தீன் அல்லது பாலிபுரோப்பிலீன் பைகளில் அடைத்து வைக்கும் வகையில், சணல் சாக்குப்பைக்கான சட்டத்தில் தளர்வு செய்யப்பட்டுள்ளது.எனவே, பற்றாக்குறையாக உள்ள சாக்குப்பை, பிளாஸ்டிக் மூலம் பூர்த்தி செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு சணல் சாக்குப்பை விலை, 28 ரூபாயாக உள்ளது. அதேசமயம், பிளாஸ்டிக் சாக்குப்பையின் விலை, 12 ரூபாய். ஆக, சணல் சாக்குப்பையுடன் ஒப்பிடும் போது, பிளாஸ்டிக் சாக்குப்பை விலை, 16 ரூபாய் குறைவாக உள்ளது.அனுமதிசர்க்கரை உற்பத்தியில் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள், 40 சதவீத சர்க்கரையை பிளாஸ்டிக் பைகளில், அடைத்து விற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, 10 சதவீத உணவு தானியங்களுக்கும், சணல் சாக்குப்பை பயன்பாட்டில் இருந்து, விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|