பதிவு செய்த நாள்
11 ஜன2013
09:15
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இறுது நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் (9.06 மணியளவில்) போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 80.04 புள்ளிகள் அதிகரித்து 19743.59 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 26.25 புள்ளிகள் அதிகரித்து 5994.90 புள்ளிகளோடு காணப் பட்டது. நாட்டின் பங்கு வியாபாரம் வியாழக்கிழமையன்றும் அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி, பங்குகளை விற்பனை செய்ததை அடுத்து, பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்தது.சீனாவின் ஏற்றுமதி, சந்தை மதிப்பீட்டை விட அதிகரித்துள்ளது என்ற செய்தியால், இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது. மேலும், ஐரோப்பிய பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் நன்கு இருந்தது
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|