பதிவு செய்த நாள்
11 ஜன2013
10:43
இந்தியாவில், பொதுவாக, போலீசார் பயன்படுத்தும் இருசக்கர வாகனம் என்றால், 'ராயல் என்பீல்டு புல்லட்' பைக் தான். இந்த பைக், 350 சிசி திறன் கொண்டது. எனினும், காலத்துக்கு ஏற்ப, போலீஸ் துறையிலும் மாற்றங்கள் ஏற்பட துவங்கியுள்ளன. இதன் ஒரு கட்டமாக, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள போலீசார், 150 சிசி திறன் கொண்ட புது ரக பைக்குகளை பயன்படுத்த துவங்கியுள்ளனர். 'ஹீரோ ஹோண்டா சிபிஇஸட்', 'சுசூகி பீரோ' போன்ற பைக்குகளை பயன்படுத்தி வந்த போலீசாரின் கவனம் தற்போது, பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பல்ஸர் பைக்குகள் மீது திரும்பியுள்ளது. உத்தர பிரதேசத்தை சேர்ந்த நொய்டா நகரம், டில்லியை ஒட்டி அமைந்துள்ளது. தேசிய தலைநகர் பிராந்திய பகுதியில், நொய்டா நகரமும் இடம் பெற்றுள்ளது. வேகமாக வளர்ந்து வரும் இந்த நகரத்தில், கடந்த சில ஆண்டுகளாக, குற்றங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, போலீŒõரின் ரோந்து பணியை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு கட்டமாக, நொய்டா போலீŒõருக்கு, 40 பஜாஜ் பல்ஸர் 220 ரக பைக்குகள் வழங்கப்பட்டுள்ளன. ஒரு பைக், ரூ.1.25 லட்சம் என்ற அளவில் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்கில், 220 சிசி திறன் கொண்ட, ஏர் கூல்டு சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப் பட்டுள்ளது. 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் வசதி கொண்டது. போலீசாருக்கு உதவி செய்யும் வகையில், இந்த பைக்கில், சைரன்கள், மெஹா போன்கள் போன்ற கருவிகளும் பொருத்தப் பட்டுள்ளன.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|