என்.எல்.சி.: மின் உற்பத்தியை 10 ஆயிரம் மெகாவாட்டாக உயர்த்த திட்டம்என்.எல்.சி.: மின் உற்பத்தியை 10 ஆயிரம் மெகாவாட்டாக உயர்த்த திட்டம் ... முக்கிய துறைமுகங்கள் கையாண்ட சரக்கு 40 கோடி டன்னாக சரிவு:பொருளாதார மந்த நிலையால்... முக்கிய துறைமுகங்கள் கையாண்ட சரக்கு 40 கோடி டன்னாக சரிவு:பொருளாதார மந்த ... ...
இந்தோனேஷியாவின் வரி குறைப்பால் பாமாயில் விலை மேலும் குறைய வாய்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜன
2013
00:17

புதுடில்லி:இந்தியாவில், பாமாயில் விலை மேலும் குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. உலகளவில், பாமாயில் உற்பத்தியில், இந்தோனேஷியா முன்னிலையில் உள்ளது. இந்நாடு, மலேசியாவின் போட்டியை எதிர்கொள்ளும் வகையில், பாமாயில் மீதான வரியை குறைக்க முடிவு செய்துள்ளது.
உற்பத்தி அதிகரிப்பு:இதன் காரணமாகவே, இந்தியாவில் பாமாயில் விலை குறைய வாய்ப்புள்ளதாக, இந்திய எண்ணெய் உற்பத்தியாளர் சங்கத்தின் செயல் இயக்குனர் பீ.வி.மேத்தா தெரிவித்து உள்ளார்.மலேசியாவில், இவ்வாண்டு, பாமாயில் உற்பத்தி அதிகரித்து உள்ளதுடன், கையிருப்பும் அதிகமாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு, மலேசிய அரசு, பாமாயில் ஏற்றுமதி மீதான வரியை படிப்படியாக குறைத்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதத்தில், மலேசிய அரசு, பாமாயில் மீதான ஏற்றுமதி வரியை, 23 சதவீதத்திலிருந்து, 8.5 சதவீதமாகவும், பின் இதை, 4.5 சதவீதமாகவும் குறைத்தது. இம்மாதத்தில், ஏற்றுமதிக்கான பாமாயில், வரி இல்லாத நிலையில், அதாவது, ஒரு டன் ஏற்றுமதிக்கான பாமாயில், 745 டாலர் என்ற விலையில் உள்ளது.
இச்சூழ்நிலையில், இந்தோனேஷியாவும், மலேசியாவின் போட்டியை எதிர்கொள்ளும் வகையில், பாமாயில் மீதான ஏற்றுமதி வரியை படிப்படியாக குறைத்துள்ளது. இந்நாடும், வரி இல்லாத அளவிற்கு பாமாயிலை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளதாக, தெரிய வந்துள்ளது.
பங்களிப்பு:சர்வதேச அளவில், பாமாயில் ஏற்றுமதியில், மேற்கண்ட இரண்டு நாடுகளின் பங்களிப்பு, 87 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இந்தோனேஷியாவும், மலேசியாவும் பாமாயில் மீதான வரியை, போட்டி போட்டுக் கொண்டு குறைத்து வருகின்றன.இது, இந்நாடுகளில் இருந்து அதிக அளவில், கச்சா பாமாயிலை இறக்குமதி செய்யும் இந்தியா, சீனா ஆகிய நாடுகளுக்கு மிகவும் சாதகமாக உள்ளது. இதனால், உள்நாட்டில் பாமாயில் விலை மிகவும் குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)