பதிவு செய்த நாள்
14 ஜன2013
17:34
மும்பை : வாரத்தின் முதல்நாளில் இந்திய பங்குசந்தைகள் 2 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்வுடன் முடிந்து இருக்கிறது. காலையில் சரிவுடன் தொடங்கிய இந்திய பங்குசந்தைகள் மதியத்திற்கு மேல் சூடு பிடிக்க தொடங்கியது. குறிப்பாக பணவீக்கம் குறைந்தது, கார் சட்டத்தை மத்திய அரசு இரண்டு ஆண்டுகளுக்கு ஒத்திவைப்பதாக மத்திய அமைச்சர் சிதம்பரம் அறிவித்தது மற்றும் எதிர்வரும் ரிசர்வ் வங்கி அறிவிப்பில் வட்டிவிகிதம் குறைக்கப்படும் போன்ற காரணங்களால் இந்திய பங்குசந்தைகள் நல்ல ஏற்றம் கண்டன.
வர்த்தகநேர முடிவின் போது மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் குறியீடு 242.77 புள்ளிகள் உயர்வுடன் 19,906.41 என்ற அளவில் முடிந்தது. கடந்த 2 ஆண்டுகளில் இந்த அளவுக்கு சென்செக்ஸ் உயர்வுடன் முடிந்தது கிடையாது. அதேப்போல் தேசிய பங்குசந்தையின் நிப்டி 72.75 புள்ளிகள் உயர்ந்து மீண்டும் 6000 புள்ளிகளை கடந்து 6,024.05 என்ற அளவில் முடிந்தது. இன்றைய வர்த்தகத்தில்(14.01.13) இன்போசிஸ், டி.சி.எஸ்., ஹெச்.சி.எல்., மகேந்திரா சத்தியம், மகேந்திரா அண்ட் மகேந்திரா, எஸ்.பி.ஐ., ஐ.சி.ஐ.சி.ஐ., உள்ளிட்ட நிறுவன பங்குகள் விலை நல்ல லாபம் பெற்றன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|