பதிவு செய்த நாள்
15 ஜன2013
23:41
புதுடில்லி:நாட்டின், பருத்தி உற்பத்தி, நடப்பு 2012-13ம் பருவத்தில் (அக்.,-செப்.,), 3.53 கோடி பொதிகளாக இருக்கும் என, இந்திய பருத்தி கழகம், மதிப்பீடு செய்துள்ளது. இது, கடந்த 2011-12ம் பருவத்தில், 3.73 கோடி பொதிகளாக இருந்தது.இதுகுறித்து, பருத்தி கழகத்தின் தலைவர் தீரன் என்.சேத் கூறியதாவது:நடப்பு பருவத்தில், நாட்டின் பல மாநிலங்களில், பருத்தி சாகுபடி பரப்பு குறைந்துள்ள நிலையிலும், இதன் உற்பத்தி, நன்கு இருக்கும். சென்ற டிசம்பர் 31ம் தேதி வரையிலுமாக, 1.03 கோடி பருத்தி பொதிகள் சந்தைகளுக்கு வந்துள்ளன.குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில், நடப்பு பருவத்தில் தலா, 80 லட்சம் பருத்தி பொதிகள் உற்பத்தியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, குஜராத் மாநிலத்தில், 1.14 கோடி பொதிகளும், மகாராஷ்டிராவில், 72 லட்சம் பொதிகளும் உற்பத்தியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.ஆந்திர மாநிலத்தில், நடப்பு பருவத்தில் பருத்தி உற்பத்தி, 58 லட்சம் பொதிகள் என்ற அளவில் இருந்து, 73 லட்சம் பொதிகளாக உயரும். அதேசமயம், அரியானா மாநிலத்தின் பருத்தி உற்பத்தி, 27.50 லட்சம் பொதிகளிலிருந்து, 22 லட்சம் பொதிகளாகவும், பஞ்சாப் மாநிலத்தின் உற்பத்தி, 18 லட்சம் பொதிகளிலிருந்து, 15 லட்சம் பொதிகளாவும் குறையும் என, தெரிகிறது.நடப்பு 2012-13ம் பருவத்தில், கையிருப்பையும் சேர்த்து, பருத்தி அளிப்பு, 4.18 கோடி பொதிகளாக இருக்கும். அதேசமயம், உள்நாட்டில், இதற்கான தேவை, 2.71 கோடி பொதிகளாக இருக்கும். இதையடுத்து, 1.47 கோடி பருத்தி பொதிகள் உபரியாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|