வணிக வரி துறைக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு : 4,500 காலியிடங்கள் நிரப்பப்படாததால்...வணிக வரி துறைக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு : 4,500 காலியிடங்கள் ... ... பெட்ரோல் விலை35 பைசா உயர்வு பெட்ரோல் விலை35 பைசா உயர்வு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
"சென்செக்ஸ்' 20,000 புள்ளிகளை எட்டியது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜன
2013
23:45

மும்பை: நாட்டின், பங்கு வர்த்தகம், செவ்வாய்க் கிழமையன்று மிகவும் சிறப்பாக இருந்தது. இதுவரை, மூன்றாவது காலாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ள பல, நிறுவனங்களின், செயல்பாடு நன்கு உள்ளதை அடுத்து, பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு, தேவை அதிகரித்திருந்தது.இந்நிலையில், ஜப்பான் நாட்டின், மத்திய வங்கி, அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், வலுவான நிதிகொள்கையை அறிவிக்க இருப்பதாக, செய்தி வெளியானது. இதையடுத்து, ஜப்பான் நாட்டின் பங்கு வர்த்தகம் நன்கு இருந்தது. இருப்பினும், ஹாங்காங், சிங்கப்பூர், தென்கொரியா ஆகிய நாடுகளில் பங்கு வர்த்தகம் மந்தமாகவே இருந்தது.நேற்றைய வர்த்தகத்தில், உலோகம், தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளைச் சேர்ந்த, நிறுவன பங்குகளின் விலை குறைந்திருந்தது. அதேசமயம், ரியல் எஸ்டேட், நுகர்பொருட்கள், வங்கி, தொலைதொடர்பு உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த, நிறுவன பங்குகள் அதிக விலைக்கு கைமாறின.பங்கு வர்த்தகம் நன்கு இருந்ததை அடுத்து, மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகத்தின் இடையே, 20,000 புள்ளிகளை தாண்டியது. ஆனால், வர்த்தகம் முடியும் போது, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 80.41 புள்ளிகள் மட்டும் உயர்ந்து, 19,986.82 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே, அதிகபட்சமாக, 20,036.82புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 19,881.78 புள்ளிகள் வரையிலும் சென்றது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண்,"நிப்டி', நேற்று, 32.55 புள்ளிகள் அதிகரித்து, 6,056.60 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே, அதிகபட்சமாக, 6,068.50 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 6,018.60 புள்ளிகள் வரையிலும் சென்றது.




Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)