பதிவு செய்த நாள்
15 ஜன2013
23:45
மும்பை: நாட்டின், பங்கு வர்த்தகம், செவ்வாய்க் கிழமையன்று மிகவும் சிறப்பாக இருந்தது. இதுவரை, மூன்றாவது காலாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ள பல, நிறுவனங்களின், செயல்பாடு நன்கு உள்ளதை அடுத்து, பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு, தேவை அதிகரித்திருந்தது.இந்நிலையில், ஜப்பான் நாட்டின், மத்திய வங்கி, அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், வலுவான நிதிகொள்கையை அறிவிக்க இருப்பதாக, செய்தி வெளியானது. இதையடுத்து, ஜப்பான் நாட்டின் பங்கு வர்த்தகம் நன்கு இருந்தது. இருப்பினும், ஹாங்காங், சிங்கப்பூர், தென்கொரியா ஆகிய நாடுகளில் பங்கு வர்த்தகம் மந்தமாகவே இருந்தது.நேற்றைய வர்த்தகத்தில், உலோகம், தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளைச் சேர்ந்த, நிறுவன பங்குகளின் விலை குறைந்திருந்தது. அதேசமயம், ரியல் எஸ்டேட், நுகர்பொருட்கள், வங்கி, தொலைதொடர்பு உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த, நிறுவன பங்குகள் அதிக விலைக்கு கைமாறின.பங்கு வர்த்தகம் நன்கு இருந்ததை அடுத்து, மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகத்தின் இடையே, 20,000 புள்ளிகளை தாண்டியது. ஆனால், வர்த்தகம் முடியும் போது, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 80.41 புள்ளிகள் மட்டும் உயர்ந்து, 19,986.82 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே, அதிகபட்சமாக, 20,036.82புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 19,881.78 புள்ளிகள் வரையிலும் சென்றது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண்,"நிப்டி', நேற்று, 32.55 புள்ளிகள் அதிகரித்து, 6,056.60 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே, அதிகபட்சமாக, 6,068.50 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 6,018.60 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|