பதிவு செய்த நாள்
18 ஜன2013
00:14
புதுடில்லி:நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான, ஒன்பது மாத காலத்தில், நாட்டின் இயற்கை ரப்பர் உற்பத்தி, 6.93 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.இது, சென்ற நிதியாண்டின், இதே காலத்தில், மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை (6.82 லட்சம் டன்) விட, 2 சதவீதம் அதிகமாகும் என, ரப்பர் வாரியம் தெரிவித்துள்ளது.
மதிப்பீட்டு காலத்தில், இயற்கை ரப்பர் பயன்பாடு, 3 சதவீதம் உயர்ந்து, 7.19 லட்சம் டன்னிலிருந்து, 7.42 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இதன் இறக்குமதி, 23 சதவீதம் அதிகரித்து, 1.37 லட்சம் டன்னிலிருந்து, 1.69 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. உள்நாட்டில், இயற்கை ரப்பர் பயன்பாடு அதிகரித்ததை அடுத்து, இதன் ஏற்றுமதி, 22,763 டன்னிலிருந்து, 10,608 டன்னாக குறைந்துள்ளது.
சென்ற டிசம்பர் மாதத்தில், இயற்கை ரப்பர் உற்பத்தி, 1.10 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. இது, கடந்த, 2011ம் ஆண்டின், இதே மாதத்தில், 1.07 லட்சம் டன் என்ற அளவில் இருந்தது.கணக்கீட்டு மாதத்தில், இயற்கை ரப்பர் பயன்பாடு, 84,795 டன்னிலிருந்து, 72 ஆயிரம் டன்னாகவும், இறக்குமதி, 21,146 டன்னிலிருந்து, 13,611 டன்னாகவும் குறைந்துள்ளன. அதேசமயம், இயற்கை ரப்பர் ஏற்றுமதி, 1,077 டன்னிலிருந்து, 1,429 டன்னாக அதிகரித்துள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|