தேயிலை உற்பத்தி11 கோடி கிலோவாக வளர்ச்சிதேயிலை உற்பத்தி11 கோடி கிலோவாக வளர்ச்சி ... உருளை கிழங்கு சாகுபடிக்கு தேசிய காப்பீட்டு பலன் உருளை கிழங்கு சாகுபடிக்கு தேசிய காப்பீட்டு பலன் ...
டீசல் விலை உயர்வு ஜவுளி துறைக்கு மரண அடி: சைமா கண்டனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜன
2013
00:49

சேலம்:மொத்தமாக கொள்முதல் செய்யப்படும் டீசலுக்கான, விலை உயர்வு ஜவுளித்துறைக்கு, மரண அடியாக உள்ளது. எனவே, விலை உயர்வை திரும்பப் பெறவேண்டும் என, சைமா கோரிக்கை விடுத்துள்ளது.
மின் பற்றாக்குறை:இதுகுறித்து, தென்னிந்திய பருத்தி ஆலைகள் சங்கத்தின் (சைமா) தலைவர் தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழக பருத்தி ஆலைகள், 95 சதவீத பருத்தியை வெளி மாநிலங்களில் இருந்து,குறிப்பாக,குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் இருந்து தருவித்து, நூலிழை உற்பத்தி செய்கின்றன.பருத்தியை கொண்டு வரவும்,உற்பத்தி செய்த நூலிழையை, வெளி மாநி லங்களில் விற்கவும், கிலோவுக்கு, ஐந்து ரூபாய் செலவாகிறது.
மின்பற்றாக்குறையால், பருத்தி ஆலைகள், டீசலை, மொத்தமாக எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து பெறுகின்றன. இவ்வகை கொள்முதலில், டீசல் லிட்டருக்கு, 11 ரூபாய் உயர்த்தப்பட் டுள்ளது.தமிழக ஜவுளி ஆலைகள், ஏற்கனவே, 50 சதவீத அளவுக்கு, மின் பற்றாக்குறையை சந்தித்து வருகின்றன. இதை சமாளிக்க, டீசலை பயன்படுத்தி ஜவுளி உற்பத்தியில் ஈடுபட்டு வரு கின்றன.இதன் காரணமாக, ஜவுளித் துறையில், கடந்த நான்கு ஆண்டுகளாக புதிய முதலீடுகள் ஏதும் இல்லாமல், 20 லட்சம் பேர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர்.
நெசவாளர்கள்:இந்நிலையில், டீசல் விலை உயர்வால், 40ம் நம்பர் நூலிழையின் விலை, கிலோவுக்கு, நான்கு ரூபாய் வரை அதிகரிக்கும்.மேலும், விசைத்தறி, கைத்தறி நெசவாளர்கள், 6 லட்சம் பேர் பாதிக்கப்படுவர்.ஏற்கனவே, மின்வாரியம் அளிக்கும் மின்சாரத்தை விட, ஜெனரேட்டர் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கான செலவு, 100 சதவீதம் அதிகமாக உள்ளது.
தினமும், 12 - 14 மணி நேரம் மின்தடையை சந்தித்து வரும் ஜவுளி ஆலைகள், தற்போதைய டீசல் விலை உயர்வால், உற்பத்தியை நிறுத்த வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளன.சர்வதேச சந்தையில், வங்கதேசம் போன்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, இந்திய ஜவுளி பொருட்களை, 20 சதவீதம் கூடுதல் விலைக்கு விற்க வேண்டியுள்ளதால், மற்ற நாடுகளுடன் போட்டி போட முடியாத நிலை உள்ளது.
கடந்த, 2011-12ம் ஆண்டில், 3,700 கோடி டாலர் அளவுக்கு அன்னியச் செலாவணியை ஈட்டித் தந்த ஜவுளித்துறை, தற்போது மின் பற்றாக்குறை, டீசல் விலை உயர்வு போன்றவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு:தொழில்துறையினரின் வேண்டுகோளுக்கிணங்க, மின் உற்பத்திக்கு தேவையான டீசல் மீதான, வாட் வரியை நீக்க, தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.இந்நிலையில், டீசல் விலை உயர்வு, ஜவுளித்துறையின் ஆணி வேரையே பிடுங்குவதாக உள்ளது.டீசல் விலை உயர்வை, மத்திய அரசு உடனே திரும்பப் பெறவேண்டும்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப் பட் டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)