பதிவு செய்த நாள்
20 ஜன2013
00:17
மும்பை:நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, சென்ற 11ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 126 கோடி டாலர் (6,930 கோடி ரூபாய்) அதிகரித்து, 29,625 கோடி டாலராக (16.29 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது.இது, இதற்கு முந்தைய 4ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 159 கோடி டாலர் குறைந்து, 29,499 கோடி டாலராக (16.22 லட்சம் கோடி ரூபாய்) சரிவடைந்து காணப்பட்டது என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மதிப்பீட்டு வாரத்தில், கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பில் மாற்றம் எதுவுமின்றி, 2,722 கோடி டாலர் என்ற அளவில் உள்ளது. மேலும், எஸ்.டீ.ஆர்., மதிப்பு, 3.13 கோடி டாலர் உயர்ந்து, 443 கோடி டாலராக அதிகரித்துள் ளது.இருப்பினும், சர்வதேச நிதியத்தில் (ஐ.எம்.எப்.,), நம் நாடு வைத்துள்ள செலாவணிகளின் மதிப்பு, 1.65 கோடி டாலர் குறைந்து, 232 கோடி டாலராக சரிவடைந்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|