பதிவு செய்த நாள்
25 ஜன2013
10:51
ராமநாதபுரம்: மீன் பாடு குறைவால், ராமநாதபுரம் மாவட்டத்தில் அதன் விலை உயர்ந்துள்ளது. ராமேஸ்வரம், பாம்பன், ஏர்வாடி உள்ளிட்ட பகுதிகளில் சமீபகாலமாக மீன்பாடு குறைவாக உள்ளது. கடலுக்கு செல்லும் மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் அவ்வப்போது தாக்கப்படுவதோடு, வெறுங்கையுடன் கரை திரும்புகின்றனர். இதனால் மீன்விலை அதிகரித்து கொண்டே செல்கிறது. கடந்த வாரம் 350க்கு விற்ற சீலா 400, 180க்கு விற்ற இறால் 200, 160க்கு விற்ற வில மீன் 180, 180க்கு விற்ற பாறை 200, 170க்கு விற்ற கணவா 190 ரூபாய் வரை விற்கிறது.
வெளிநாடு செல்லும் "ரோமியோ' : மன்னார் வளைகுடா கடலோர பகுதியில் மட்டுமே அரிதாக காணப்படும் ரோமியோ (சிவப்பு நகரை) மீனிற்கு வெளிநாடுகளில் கிராக்கி உள்ளது. இதனால், கிலோ 150 ரூபாய் வரை விலைபோகிறது. அதேபோல், கேரளாவில் இருந்து ராமநாதபுரத்திற்கு வரும் சங்கரா மீன் 120க்கு விற்கப்படுகிறது. சீலா, ஊளா உள்ளிட்ட பெரியவகை மீன்கள், சில நாட்களாக வெளிமாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது என, ராமநாதபுரம் மீன் வியாபாரிகள் கூறினர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|