பதிவு செய்த நாள்
26 ஜன2013
02:07
புதுடில்லி:மத்திய அரசு, தங்கம் சாரா முதலீட்டு திட்டங்களுக்கு வழங்கப்படும் வரிச் சலுகையை அதிகரிக்க உள்ளது. இது குறித்த அறிவிப்பு, வரும் 2013-14ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், வெளியிடப்படும் என, தெரிகிறது
.
கூடுதல் ஆதாயம்:தங்கம் மீதான முதலீட்டை விட, இதர நிதி இனங்களில் மேற்கொள்ளப்படும் முதலீட்டிற்கு, கூடுதல் ஆதாயம் கிடைக்கச் செய்யும் நோக்கில், மத்திய அரசு, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டில்,புதிய முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் வகையில், வரிச் சலுகைகளுடன் கூடிய, ராஜிவ் காந்தி பங்கு சேமிப்பு திட்டம் (ஆர்.ஜி.எஸ்.எஸ்.,) அறிவிக்கப்பட்டது.
நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையை கட்டுப்படுத்தும் நோக்கில்,மத்திய அரசு, அண்மையில், தங்கம் மீதான இறக்குமதி வரியை, நான்கு சதவீதத்தில் இருந்து ஆறு சதவீதமாக உயர்த்தியது.மேலும்,தங்கத் தாது மற்றும் தங்க கட்டி இறக்குமதி மீதான சுங்க வரி, 2 சதவீதத்திலிருந்து, 5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், வரும் 2013-14ம் நிதியாண்டு பட்ஜெட்டில், தங்கம் சாராத இதர நிதியினங்களில் மேற்கொள்ளும் முதலீட்டிற்கான வரிச் சலுகைகளை அதிகரிக்கவும், மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.குறிப்பாக, ஆயுள் காப்பீட்டு பிரிமியம், பொது சேமநல நிதி உள்ளிட்ட முதலீடுகளுக்கு, வருமான வரிச் சட்டம் 80 சி., பிரிவில் வழங்கப்படும் வரிச் சலுகைக்கான உச்ச வரம்பும் உயர்த்தப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
ஓய்வூதிய திட்டம்:மேலும், பரஸ்பர நிதியங்களின் ஓய்வூதிய திட்ட முதலீடுகளில், வரிச் சலுகைக்கான வரம்பும் அதிகரிக்கப்படும் என,தெரிகிறது.இத்துடன்,வருமான வரி சட்டம் 80 சி., பிரிவின் கீழ், ஆர்.ஜி.எஸ்.எஸ்., முதலீடுக ளுக்கும், வரிச்சலுகை வழங்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, மேற்குறிப்பிட்ட திட்டங்களில், அதிகபட்சமாக ஒரு லட்ச ரூபாய் வரையிலான முதலீடுகளுக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது.இந்த முதலீட்டு வரம்பை அதிகரிக்கும் பட்சத்தில், வரி சேமிப்பை கருத்தில் கொண்டு, அதிக அளவில் முதலீடுகள் குவியும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|