பதிவு செய்த நாள்
26 ஜன2013
02:11
புதுடில்லி:நடப்பு பருவத்தில் (அக்.,- செப்.,), நாட்டின் சர்க்கரை உற்பத்தி, 2.43 கோடி டன்னாக உயரும் என, இந்திய சர்க்கரை உற்பத்தியாளர் கூட்டமைப்பு (இஸ்மா) மறுமதிப்பீடு செய்துஉள்ளது.இது,முந்தைய மதிப்பீட்டில், 2.40 கோடி டன்னாக இருக்கும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது.
சாகுபடி பரப்பளவு :கடந்த 2011-12ம் ஆண்டு பருவத்தில், நாட்டின் சர்க்கரை உற்பத்தி, 2.63 கோடி டன்னாக அதிகரித்து காணப்பட்டது. நடப்பு பருவத்தில், உள்நாட்டில், தாமதமான மற்றும் குறைவான மழைப் பொழிவால், கரும்பு சாகுபடி பரப்பளவு குறைந்துள்ளது. இதனால், கடந்த பருவத்துடன் ஒப்பிடும் போது, நடப்பு பருவத்தில், சர்க்கரை உற்பத்தி குறைவாகவே இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின், சர்க்கரை உற்பத்தியில், உத்தர பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. நடப்பு பருவத்தில், இம்மாநிலத்தின் சர்க்கரை உற்பத்தி, 81 லட்சம் டன்னை எட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இது, முந்தைய மதிப்பீட்டில், 79 லட்சம் டன் என்ற அளவில் இருந்தது.மகாராஷ்டிரா மாநிலத்தின், சர்க்கரை உற்பத்தி, 65 லட்சம் டன்னிலிருந்து, 68 லட்சம் டன்னாக அதிகரிக்கும் என,மதிப்பிடப்பட்டுள்ளது. சென்ற பருவத்தில், இம்மாநிலத்தில், பருவ மழை நன்கு இருந்ததை அடுத்து, கரும்பு அரவை, 7.71 கோடி டன்னாக அதிகரித்திருந்தது.
தற்போது, மழை அளவு குறைந்துள்ளதால், கரும்பு அரவை, 6 கோடி டன்னாக இருக்கும் என, எதிர்பார் க்கப்படுகிறது. நடப்பு பருவத்தில், இதுவரையிலுமாக இம்மாநிலம், 33 லட்சம் டன் சர்க்கரையை உற்பத்தி செய் துள்ளது.
தமிழகம்:கர்நாடகாவின் சர்க்கரை உற்பத்தி, 30 லட்சம் டன்னிலிருந்து, 32 லட்சம் டன்னாக அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.மழை பொய்த்ததால், தமிழகத்தின் பல பகுதிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், நடப்பு பருவத்தில், இம்மாநிலத்தின் சர்க்கரை உற்பத்தி, 22 லட்சம் டன்னாக குறையும் என, மதிப்பிடப் பட்டுள்ளது. இது, முந்தைய மதிப்பீட்டில், 25.50 லட்சம் என்ற அளவில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத்ஆந்திர மாநிலத்தின் சர்க்கரை உற்பத்தி, 10.80 லட்சம் டன்னிலிருந்து, 10 லட்சம் டன்னாக குறையும் என, மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
அதேசமயம்,குஜராத்தின் சர்க்கரை உற்பத்தி, 8.80 லட்சம் டன்னிலிருந்து, 9.60லட்சம் டன்னாக உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.மத்திய உணவு அமைச்சகம்,நடப்பு பருவத்தில்,சர்க்கரை உற்பத்தி, 2.30 கோடி டன்னா கவும், இதன் பயன்பாடு, 2.20 கோடி டன்னாகவும் இருக்கும் என, மதிப்பிட்டுள்ளது. இது, இந்திய சர்க்கரை கூட்டமைப்பின் மதிப்பீட்டை விட குறைவாகும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|