பதிவு செய்த நாள்
27 ஜன2013
00:03
புதுடில்லி:நடப்பு நிதியாண்டின், அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான, மூன்றாவது காலாண்டில், மத்திய அரசின் பொது கடன், 40.48 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. இது, செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த இரண்டாவது காலாண்டை (39.06 லட்சம் கோடி ரூபாய்)விட, 3.6 சதவீதம் அதிகமாகும் என, மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய, மாநில அரசுகள், அவற்றின் செலவினங்களை ஈடுகட்டுவதற்கு, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து, கடன்களை வாங்குகின்றன. இதுவே, பொது கடன் என்றுஅழைக்கப்படுகிறது.
இந்திய அரசியல் எல்லைக்கு உட்பட்டு கடன் பெறுவது, உள்நாட்டு கடன் என்றும், அயல் நாடுகளில் இருந்து வாங்கப்படும் கடன், வெளிநாட்டு கடன் என்றும் அழைக்கப்படுகிறது. சென்ற டிசம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில், மத்திய அரசின் பொது கடனில், உள்நாட்டு கடன், 90.7 சதவீதமாக (36.69 லட்சம் கோடி ரூபாய்) இருந்தது. இது, இதற்கு முந்தைய இரண்டா வது காலாண்டில், 90.5 சதவீதம் என்ற அளவில் இருந்தது.இதே காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டீ.பி.,), உள்நாட்டு கடனின் பங்களிப்பு, 34.8 சதவீதத்திலிருந்து, 36.1 சதவீதமாக உயர்ந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|