பதிவு செய்த நாள்
28 ஜன2013
00:21
கோல்கட்டா:தொழில் துறையில் மந்த நிலை ஏற்பட்டுள்ளதால், நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலண்டில், பல பெயின்ட் நிறுவனங்களின் விற்பனை வளர்ச்சி சுணக்கம் கண்டுள்ளது. இது தவிர, மூலப் பொருட்களின் விலை உயர்வும் இத்துறை நிறுவனங்களை வெகுவாக பாதித்துள்ளது.
தற்போதைய நிலையில், இந்திய பெயின்ட் தொழிலின் சந்தை மதிப்பு, 26 ஆயிரம் கோடி ரூபாய் என்ற அளவில் உள்ளது. அலங்கார பெயின்ட் சந்தை, 18 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ள நிலையில், தொழில் துறையில் இதன் பங்களிப்பு வீழ்ச்சி கண்டுள்ளது.ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில், உள்நாட்டில் சரக்கு வாகனங்களின் விற்பனை, 22 சதவீதம் அளவிற்கு சரிவைக் கண்டுள்ளது.
இதைஅடுத்து, மோட்டார் வாகன துறைக்கான, பெயின்ட் தேவை மிகவும் வீழ்ச்சி கண்டுள்ளது.இது போன்ற பல்வேறு இடர்பாடுகளால், இத்துறை நிறுவனங்களின் நிகர லாபம் எதிர்பார்த்த அளவிற்கு, அதிகரிக்கவில்லை என, இத்துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் கருத்து தெரிவித்துள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|