பதிவு செய்த நாள்
31 ஜன2013
00:34
மும்பை:இந்தியர்களிடையே அதிக நம்பிக்கையை பெற்ற பிராண்டுகளின் பட்டியலை, டிரஸ்ட் ரீசர்ச் அட்வைசரி நிறுவனம் வெளியிட்டுள்ளது. பிராண்டு டிரஸ்ட் ரிபோர்ட் என்ற இந்த ஆய்வறிக்கை பட்டியலில், "நோக்கியா' நிறுவனம், தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்த பட்டியலில், சாம்சங், சோனி நிறுவனங்கள், கடந்த ஆண்டை விட, தலா ஒரு படி முன்னேறி, இரண்டு மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளன.பீ.எம்.டபிள்யூ நிறுவனம், குறிப்பிடத்தக்க வகையில், 20 படிகள் முன்னேறி, நான்காவது இடத்தை பிடித்துள்ளது.அதே சமயம், கடந்த இரண்டு ஆண்டுகளாக, மக்களின் நம்பிக் கையான பிராண்டு வரிசையில், இரண்டாவது இடத்தில் இருந்த டாட்டா நிறுவனம், ஐந்தாவது இடத்திற்கு இறங்கி யுள்ளது.
கோத்ரெஜ் நிறுவனம், ஐந்து படிகள் முன்னேறி, ஆறாவது இடத்தையும், ரிலையன்ஸ் மூன்று படிகள் ஏற்றம் கண்டு, ஏழாவது இடத்தையும் பிடித்துள்ளன.பஜாஜ் நிறுவனம், ஏழில் இருந்து எட்டாவது இடத்திற்கு வந்துள்ளது. ஏர்டெல், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, ஒன்பதாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.எல்.ஜி., நிறுவனம், ஏழு படிகள் கீழிறங்கி, 10வது இடத்தை பிடித்துள்ளது.
இந்தியர்களின் நம்பிக்கைக்குரிய, 1,100 பிராண்டுகள் குறித்த இந்த ஆய்வு, 16 நகரங்களில், 2,505 பேரிடம் மேற்கொள்ளப்பட்டது. இதில், 30 லட்சத்திற்கும் அதிகமான தகவல்கள் திரட்டப்பட்டன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|