பதிவு செய்த நாள்
05 பிப்2013
00:24
புதுடில்லி:நடப்பு 2012-13ம் சந்தைப் பருவத்தில் (அக்.,-செப்.,), நாட்டின் சர்க்கரை உற்பத்தி, 2.43 கோடி டன்னாக அதிகரிக்கும் என, இந்திய சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு (இஸ்மா) புதிய மதிப்பீட்டை வெளியிட்டுள்ளது.கடந்த 2011-12ம் பருவத்தில், 2.60 கோடி டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டது. அதேசமயம், உள்நாட்டில், இதன் பயன்பாடு, 2.20 கோடி டன் அளவிற்கே இருந்தது. எனினும், தற்போதைய புதிய உற்பத்தி மதிப்பீடு, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், 17 லட்சம் டன் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டில் அதிகளவில் சர்க்கரை உற்பத்தியாகும், உத்தர பிரதேசத்தில் இதன் உற்பத்தி, 81 லட்சம் டன்னாக இருக்கும். இதே போன்று, மகாராஷ்டிரா மாநிலத்தின் சர்க்கரை உற்பத்தி, 68 லட்சம் டன்னாகவும், கர்நாடகாவில் இதன் உற்பத்தி, 32 லட்சம் டன்னாகவும் இருக்கும் என, "இஸ்மா' அமைப்பின் புதிய மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நடப்பு பருவத்தில், ஜனவரி வரையிலான 4 மாதங்களில், நாட்டின் சர்க்கரை உற்பத்தி, 3 சதவீதம் உயர்ந்து, 1.38 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, மகாராஷ்டிராவில் இதன் உற்பத்தி, 48.20 லட்சம் டன்னாக உள்ளது. இது தவிர, உத்தர பிரதேசம் (36.30 லட்சம் டன்), கர்நாடகா (24 லட்சம் டன்), தமிழ்நாடு (6.25 லட்சம் டன்) மற்றும் ஆந்திரா (5.85 லட்சம் டன்) ஆகிய மாநிலங்களிலும் குறிப்பிடத்தக்க அளவிற்கு சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|