பதிவு செய்த நாள்
09 பிப்2013
00:35
சென்னை:சிட்டி யூனியன் வங்கி, சென்ற டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த மூன்றாவது காலாண்டில், 85 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளதாக, இவ்வங்கியின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான என்.காமகோடி கூறினார்.இதுகுறித்து, அவர் மேலும் கூறியதாவது:
நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான ஒன்பது மாத காலத்தில், வங்கியின் மொத்த வணிகம், 26.92 சதவீதம் வளர்ச்சி கண்டு, 33,556 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதில், திரட்டப்பட்ட டெபாசிட், 23.57 சதவீதம் உயர்ந்து, 19,044 கோடி ரூபாயாகவும், வழங்கப்பட்ட கடன்கள், 31.60 சதவீதம் வளர்ச்சிகண்டு, 14,512 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளன.சென்ற டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த மூன்றாவது காலாண்டில், வங்கியின் நிகர லாபம், 85 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின், இதே காலாண்டை (72 கோடி ரூபாய்) விட, 18 சதவீதம் அதிகமாகும்.
வங்கி, அண்மையில் உரிமை பங்கு வெளியீட்டை மேற்கொண்டது. 258 கோடி ரூபாய் மதிப்பிற்கான, இந்த உரிமை பங்கு வெளியீட்டில், பாதி தொகை விண்ணப்பத்துடன் பெறப்பட்டுள்ளது. மீதத் தொகை, கூடிய விரைவில் பெறப்படும்.தற்போது, வங்கியின் மூலதன இருப்பு விகிதம், 13 சதவீதம் என்ற அளவில் உள்ளது. உரிமை பங்கு வெளியீட்டின் வாயிலான முழு தொகையும் கிடைத்த பிறகு, இது, 14 சதவீதத்தைத் தாண்டும். வங்கி, இம்மாதம் 28ம் தேதி திருப்பதியில், புதிய கிளை ஒன்றை திறக்க உள்ளது. இவ்வாறு காமகோடி கூறினார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|